தாங்கிய தங்கக் காசு:
செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010
திருவள்ளுவரின் திருமேனி தாங்கிய தங்கக் காசு:
தாங்கிய தங்கக் காசு:
ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010
தமிழா நீ பேசுவது தமிழா?
தமிழா நீ பேசுவது தமிழா?
தமிங்கிலம் நீ பேசுவது அழகா?
உணவுக் கலப்படம் உடலுக்குக் கேடு
மொழிக் கலப்படம் மொழிக்குக் கேடு
என்ன வளம் இல்லை நம் தமிழ்மொழியில்
ஏன் கையை ஏந்த வேண்டும் பிறமொழியில்
தமிழைப் பிழையின்றித் தமிழாகவேப் பேசு
தமிழில் பிறமொழி கலந்து பேசக் கூசு
தொலைக்ககாட்சியில் தினமும் தமிழ்க்கொலை நடக்குது
தொல்லைக்காட்சி நிலை காண நெஞ்சம் கொதிக்குது
பத்துச் சொற்களில் இரு சொல் தமிழ்
பெயரோதமிழ் மாலை என விளம்பரங்கள்
தமிழா உன் அடையாளம் தமிழ்
தமிழ் சிதைந்தால் தமிழன் சிதைவான் உணர்
தமிழா உன் முகவரி தமிழ்
தமிழ் அழிந்தால் தமிழன் அழிவான் எழு
நமக்கென்ன என்று நீ இருந்து விட்டால்
நாளைய வரலாறு உன்னைப் பழிக்கும்
உலகின் முதன்மொழி தமிழ்மொழி
உலக மொழிகளின் தாய்மொழி தமிழ்மொழி
பிறமொழிகலந்து பேசுவதை விட்டுவிடு
பண்டைத் தமிழ்மொழிக் காத்திட நீ விழித்திடு
செம்மொழி நம் மொழி சிறப்பை உணர்ந்திடு
புதிய ஹைக்கூ
கரைந்தது காகம்
வந்தனர் விருந்தினர்
காகத்திற்கு
அவசியமானது
புற அழகல்ல
அக அழகுதான்
சண்டை போடாத
நல்ல நண்பன்
நூல்
ரசித்து படித்தால்
ருசிக்கும் புத்தகம்
வாழ்க்கை
சக்தி மிக்கது
அணுகுண்டு அல்ல
அன்பு
அழகிய ஓவியிமான்து
வெள்ளை காகிதம்
துரிகையால்
மழை நீர் அருவி ஆகும்
அருவி நீர் மழை ஆகும்
ஆதவனால்
ஒன்று சிலை ஆனது
ஒன்று அம்மிக்கல் ஆனது
பாறை கற்கள்
காட்டியது முகம்
உடைந்த பின்னும்
கண்ணாடி
உருவம் இல்லை
உணர்வு உண்டு
தென்றல்
பாத்ததுண்டா மல்லிகை
சிவப்பு நிறத்தில்
வாடா மல்லிகை
கூர்ந்து பாருங்கள்
சுறுசுறுப்பை போதிக்கும்
வண்ணத்துப்பூச்சி
இல்லாவிட்டாலும் கவலை
இருந்தாலும் கவலை
பணம்
உடல் சுத்தம் நீரால்
உள்ளத்தின் சுத்தம்
தியானத்தால்
மழலைகளிடம்
மூட நம்பிக்கை விதைப்பு
மயில் இறகு குட்டி போடும்
பரவசம் அடைந்தனர்
பார்க்கும் மனிதர்கள்
கவலையில் தொட்டி மீன்கள்
அம்மாவை விட
மழலைகள் மகிழ்ந்தன
அம்மாவிற்கு விடுமுறை
இளமையின் அருமை
தாமதமாக புரிந்தது
முதுமையில்
தோற்றம் மறைவு
சாமானியர்களுக்குதான்
சாதனையாளர்களுக்கு இல்லை
ஹைக்கூ
மலருக்கு தடை
விதவை
இயற்கையா? செயற்கையா?
கூந்தல் மணம் மட்டுமல்ல
பெண்களின் மனமும்தான்
மலரே மலர் சூடியது
கனியே கனி சுவைத்தது
என்னவள்
என்னைவிட என் பேனா
அதிகம் நேசிக்கிறது அவளை
அவளைப்பற்றியே எழுதுகிறது.
விலை மதிப்பற்றது
விற்க்க கூடாதது
காதலி தந்த பரிசு
உதட்டிட்க்கு பூசுங்கள்
உள்ளத்திற்க்கு பூசாதீர்கள்
சாயத்தை...
உன் விழி கண்டு
தாமரைகள் மலர்கின்றன
ஆதவனுக்கு பொறாமை.
கவிஞர் இரா .இரவி நூல்கள்
விழிகளில் ஹைக்கூ
என்னவள்
இதயத்தில் ஹைக்கூ
புதிய ஹைக்கூ -
மனம் வருந்தியது
விணாய் போனதற்கு
திருஷ்டி பூசணி
ஓராயிரம் பொருள் கிடைக்கும்
உற்று நோக்கினால்
படைப்பதற்கு
மேடுகளைத் தகர்த்து
பள்ளம் நிரப்பு சமத்துவம்
பொதுவுடமை
விழி இரண்டு போதாது
வனப்பை ரசிக்க
வண்ண மலர்கள்
ஒய்வதில்லை
விண்ணும் மண்ணும் அலையும்
ஒய்ந்திடும் மனிதன்
வெட்ட வெட்ட
வளரும் பனைமரம்
பாராட்ட வளரும் குழந்தை
குடியால் கோடிகள் திரட்டி
கோடித் துணி தந்தனர்
ஏழைகளுக்கு
புதிய பொருளாதாரம்
கல்வி தனியார் மயம்
மது அரசுமயம்
உருவமின்றியும்
தேசப்படுத்தியது வாழையை
காற்று
அன்றே அநீதி
ஆண்களுக்கு கை சிலம்பு
பெண்களுக்கு கால் சிலம்பு
இருப்புப் பாதையில்
இருப்பின்றி பயணம்
தொடர் பயணம்
கழிவுநீர் உறிஞ்சி
இளநீர் தரும்
உயர்ந்த தென்னை
யார் உயர் திணை
மோதி விழும் மனிதன்
கூடி வாழும் பறவைகள்
விளைவித்தன கேடு
கண்ணிற்கும் மனதிற்கும்
தொ்(ல்) லைக்காட்சிகள்
தரம் தாழ்ந்தால்
களையாகும்
கலை
மாடு செரிப்பதற்கும்
மனிதன் மகிழ்வதற்கும்
உதவிடும் அசைபோடுதல்
போராட்டம் நடிப்பு அரசியலில்
பேராட்டமே வாழ்க்கை
ஏழைகளுக்கு
கண்ணிற்கு குளிர்ச்சி
மனதிற்கு மகிழ்ச்சி
இயற்கை
மனம் வருந்துவதில்லை
மங்கையர் சூடாததற்கு
எருக்கம் பூக்கள்
சாலை மூடியதும்
மரியாதை செலுத்தும் வாகனங்கள்
தொடர் வண்டிக்கு
புறக்குப்பை உரமாகும்
அகக்குப்பை
தாழ்த்தி விடும்
பொய் வழக்குப் போடுவதில்
காவல் துறை
புதிய ஹைக்கூ
அதிசியம்தான்
கரிசல் பூமியில்
விளைந்தது வெண் பருத்தி
பயிர்களின் உயிர்
வளர்க்கும் உயிர்
மழை
கண்ணிற்கு குளிர்ச்சி
மனதிற்கு மகிழ்ச்சி
இயற்கைக்காட்சி
மனம் வருந்தவில்லை
மங்கையர் சூடாதத்ற்க்காக
எருக்கம் பூ
புறக்குப்பை உரமாகும்
அகக்குப்பை
தாழ்வாகும்
கழிவு நீர் உறிஞ்சி
இளநீர் தரும்
உயர்ந்த தென்னை
வனப்பை ரசிக்க
விழி இரண்டு போதாது
வண்ணமலர்கள்
வெட்ட வெட்ட
வளரும் பனைமரம்
பாராட்ட வளரும் குழந்தை
ஓராயிரம் பொருள் கிடைக்கும்
உற்று நோக்கினால்
படைப்பதற்கு
இரா .இரவி
சனி, 28 ஆகஸ்ட், 2010
கவிஞர் இரா .இரவியின் படைப்புகள் பிற இணையங்களில் படித்து மகிழுங்கள்
பிற இணையங்களில் படித்து மகிழுங்கள்
http://tamilbookmarket.com/
http://tamilparks.nsguru.com/-
http://nidurseasons.blogspot.
http://www.eegarai.net/-f17/--
http://www.viyapu.com/news/?p=
ஹைக்கூ
ஹைக்கூ – கவிஞர் இரா.இரவி
ஏவுகணை சோதனை வெற்றி
விலைவாசி குறைப்பில் படு தோல்வி
இந்தியா
அறிவு விளக்கை அணைத்து விட்டு
அணையா விளக்கு
காமராசருக்கு
தூரத்தில் தர்ம தரிசனம்
அருகில் நடப்பது
அதர்ம தரிசனம்
இலஞ்சம் ஒழிப்பவரே
இலஞ்சம் வாங்கி கைது
காவல்துறை
ஏறும் விலைவாசி
இறக்கிட யோசி
மக்கள் விருப்பம்
அன்று ஊறுகாய்
இன்று சாப்பாடு
திரைப்படங்களில் ஆபாசம்
நாட்டில் ஓடியது
தேனும் பாலும்
திருப்பதிக்கு தங்கக் கோபுரம்
பேச ஆரம்பித்தனர்
மதுவிலக்கு
அருகில் தேர்தல்
வெற்றி பெற்றன
ஊடகங்கள்
பண்பாட்டுச் சீரழிப்பில்
போதித்தன
மிருக குணம்
தொ(ல்)லைக்காட்சித் தொடர்கள்
குடிபோதையில்
குடும்பத்தலைவன்
தள்ளாடும் குடும்பம்
வந்தாரை வாழ வைத்தே
வீடு இழந்தவன்
தமிழன்
கூழ் இன்றி ஏழை
கோடிகளில் அரசியல்வாதி
வாழ்க இந்தியா
சக நடிகர் கைது
கண்டிக்காத திரைஉலகம்
சுயநலவாதிகள்
வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010
புதன், 25 ஆகஸ்ட், 2010
9 வயதில் பார்வை பறிபோனது திரு .பழனியப்பன் அவர்களுக்கு
பார்வையின் பயனையும், பார்வையற்றதன் துன்பத்தையும்
உணர்ந்த காரணத்தால் பார்வையற்றவர்களுக்காக
மூன்றாம் பார்வை அறக் கட்டளை நிறுவி
அகவிழி பாவையற்றோர் விடுதி தொடங்கி
5 ஆண்டுகளாக கஷ்டப் பட்டு நடத்தி வருகிறார் .
25 மாணவ மாணவியருக்கு இலவச உணவு,
கல்வி ,ஆற்றல் வளர்க்க பயிற்சி
தங்குமிடம் நல்கி நடத்தி வருகிறார் .
மனித நேயத்தோடு வாழ்த்து வரும்
நல்ல மனிதருக்கு மனிதாமானத்தோடு
உதவிடுவோம் .அவரது இணையத்தில்
அவரது சாதனையைப் பாருங்கள் .நன்றி
இரா .இரவி
http://agavizhi.in/
http://agavizhi.org/
கவிஞர் இரா .இரவியின் புதிய இணையம் பார்த்து மகிழுங்கள்
செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010
ஓ இளைஞனே !கவிஞர் இரா.இரவி
விடியவில்லை என்றவனே
விடிந்தும் நீ எழவில்லை
விழித்துப்பார் இளைஞனே
விடிந்தது விளங்கும்
கடிகார முள்ளைப்பார்
களைப்பின்றி ஓடுவதைப் பார்
சோம்பேறித் தனத்தை விடுத்து
ஓய்வின்றி உழைக்கப்பார்
எதிர் காலத்திற்குச் சேமிக்கும்
எறும்பின் சுறுசுறுப்பைப்பார்
மலர்களில் தேனை
எடுத்துச் சேமிக்கும் தேனீயைப்பார்
சுறுசுறுப்பாக மாறிப்பார்
திங்கள், 23 ஆகஸ்ட், 2010
பணம் அனுப்பி ஏமாற வேண்டாம்
திரு இறைஅன்பு அவர்கள் நேர்மையான அதிகாரி
என்பது நாடு அறிந்த உண்மை .iraianbu@hotmail.com
அவரது மின் அஞ்சலை திருடிய திருட்டுக் கும்பல்
அவர் லண்டனில் இருந்து பணம் கேட்பது போல
போலியான மின் அஞ்சலை அனுப்பி வருகின்றது .
அவர் சென்னையில் உள்ளார் .லண்டன் செல்லவில்லை .
எனவே யாரும் பணம் அனுப்பி ஏமாற வேண்டாம் .
மின் அஞ்சலின் ரகசிய குறியீட்டை யாருக்கும்
தராமல் எச்சரிகையாக இருங்கள் .
இரா .இரவி
www.kavimalar.com
http://tamilbookmarket.com/
http://eraeravi.blogspot.com/
http://eraeravi.wordpress.com/
www.tamilauthors.com
கொடிது கொடிது வறுமை கொடிது

கொடிது கொடிது வறுமை கொடிது
வயிற்றுப் பசிப் போக்க
கயிற்றில் நடக்கும் கொடுமை
காசு போடாத கல் நெஞ்சங்கள்
நூல் இழை தவறினாலும் மரணம்
நுட்பமாக வேண்டும் கவனம்
இந்தியா ஏவுகணை ஏவி என்ன பயன் ?
ஏழ்மையை ஒழிக்க வழி காணுங்கள்
அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள்
அழுகி வீணாகப்போகும் தானியங்களை
அல்லல் படும் ஏழைகளுக்கு வழங்குங்கள்
வேலைக்கு உத்திரவாதம் வழங்குங்கள்
இரா .இரவி
ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010
தி ஹிந்து High on Haiku
High on Haiku
| R. Ravi has a love for Tamil poetry |

SPONTANEOUS R. Ravi
Inspiration makes a man more creative. Take, for instance, R. Ravi, whose educational qualifications have no bearing on his passion. It is his sheer love for Tamil poetry that drives him to pen free verses and haikus in Tamil.
Tracing his interest in the native language and literature to school days, he says: “I was thrilled to study in Setupati Higher Secondary School where Subramania Bharathi worked. It inspired me to visit literary fora regularly.After I finished my schooling, I was on the lookout for a job. I worked for a pharmaceutical wholesale dealer for a meagre remuneration. But it helped me a lot at that time.”
Later he joined B.Com through correspondence. “But I did not write the examinations. My ambition was to become a cost accountant, which still remains a dream,” says Ravi, a clerk with the Department of Tourism.
Inspired by the haiku poems of Murugesan of the Tamil Nadu Progressive Writers’ Association, he got drawn to this genre.
Challenging
“Haiku is a challenging task for any poet. Generally, it is a three-line poem comprising three metrical phrases of five, seven and five. It describes two scenes and the last line is generally the punch line which springs a surprise,” he says.
He has written over 1,500 haikus on different topics from superstition to women’s liberation, from progressive thinking to unemployment.
He has also authored eight anthologies including “Kavithai Saral”, “Haiku Kavithaigal”, “Vizhigalil Haiku”, “Ullathil Haiku”, “Ennaval”, “Nenjathil Haiku”, “Idhayathil Haiku” and “Kavithai Alla Vithai”.
Bharathidasan and and Madurai Kamaraj Universities have included his poems in the curriculum.
For details, visit his website www.kavimalar.com.
T. SARAVANAN
“Libraries promote social and cultural progress of humanity

STRESS ON READING: V.R. Bhoopalan, District Judge, Madurai, delivering a talk on World Book Day at the District Central Library.
MADURAI: Libraries remain a sacred space, enlightening not only the mind by quelling ignorance and promoting the social and cultural progress of humanity, but also give a chance to get an insight into the best of minds in the form of printed words, said V.R. Bhoopalan, District Judge, Madurai.
He was delivering a talk on the occasion of ‘World Book and Copyright Day’ organised here on Monday by District Central Library and Book Readers’ Circle, Madurai. The Judge’s speech touched upon the genesis of various days such as May Day and International Women’s Day and their significance. He particularly asked the young people to discover the pleasure of reading.
Earlier in the meeting a young poet delivered a poem highlighting how eminent philosophers and intellectuals such as Karl Marx, Frederick Engels and B.R. Ambedkar made libraries their first home. He also referred to Bharathidasan, Bharathiar and Surada (a poet who is known for his similes), who, he said, had stressed the importance of libraries and inculcating reading habit.
Madurai-based poet R. Ravi and R. Sakthivel, First Grade Librarian, District Central Library, Madurai, were present.
அன்னை தெரேசா
அன்னை தெரேசா
[ ]
அன்னை தெரேசா (அல்லது அன்னை தெரசா) (எக்னஸ் கோஞ்செ பொயாஜியூ, Agnes Gonxha Bojaxhiu ஆகஸ்ட் 26, 1910 – செப்டம்பர் 5, 1997) இந்தியாவில் கருணை இல்லம் (Missionaries of Charity) என்ற கிறிஸ்தவ சமூகசேவை அமைப்பை தோற்றுவித்த அல்பேனிய உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியாவார். கொல்கத்தாவின் வறிய மக்களிடையே அவர் செய்த நற்பணிகள் உலக பிரசித்தமாக்கியது. இவரது மரணத்தின் பின்னர் பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரால் ஆசிர்வதிக்கப்பட்டவராக அறிவிக்கப்பட்டார்.
பெற்ற விருதுகள்
* 1962 – சமாதானம் மற்றும் உலக புரிந்துணர்வுக்கான மக்சேசே விருது வழங்கப்பட்டது.
* 1972 – பாப்பரசர் 23ஆம் அருளப்பர் சமாதான பரிசும் கபிரியேல் விருதும் வழங்கப்பட்டது.
* 1973 – டெம்லெடொன் விருது
* 1979 – அமைதிக்கான நோபல் பரிசு
* 1980 – இந்திய அரசின் பாரத ரத்னா பட்டம் வழங்கப்பட்டது.
* 1981 – எய்டி ஆட்சியாளரான ஜியாண்-குளோட் டவலியரினால் லெஜென் டி ஒணர் (Legion d’Honneur) என்ற கௌரவ பட்டம் வழங்கப்பட்டது.
* 1985 – அமெரிக்காவின் அதியுயர் விருதான விடுதலைக்கான அதிபர் பதக்கம் வழங்கப்பட்டது.
* 1996 – கௌரவ அமெரிக்க குடிமகள் தகமை வழங்கப்பட்டது.
* 1997 – அமெரிக்க காங்கிரஸ் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
மேலும் உயிருடன் இருந்தபோதே இந்திய தபால் தலையில் உருவம் பதிக்கபப்ட்ட முதலாவது நபரும் இவரேயாவார்.
http://thaalamnews.com/news.php?id=164&cat=ya
திருக்குறள் ஆய்வுக் கருத்தரங்கம் பொருள் : குறள் கூறும் குடிமை - கவிஞர் இரா.ரவி
திருக்குறள் ஆய்வுக் கருத்தரங்கம் பொருள் : குறள் கூறும் குடிமை - கவிஞர்
இரா.ரவி editor www.kavimalar.com உலகப் பொதுமறையான திருக்குறளில் 1330
குறள்கள் இருந்தாலும், குடிமை பற்றிய 10 திருக்குறளைக் கடைபிடித்தால் வாழ்வில்
உயரலாம். மனிதர்களில் சிலர், நான் உயர்ந்த குடியில் பிறந்தவன் என இருமாப்புடன்
இருக்கின்றனர். ஆனால் திருவள்ளுவர் யார் ? உயர்ந்த குடி என்பதற்கு பல்வேறு
விளக்கங்கள் தந்துள்ளார். திருவள்ளுவர் வழியில் வாழ்பவரே உயர்குடி.
இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு - குறள் 951
எந்த ஒரு மனிதன், நடுநிலை தவறாமல் நாணயத்தோடு நடக்கிறானோ ? அவன் தான் உயர்ந்த
குடி உயர்ந்த குடியில் பிறந்தவன் என்று சொல்லிக் கொண்டு நாணயம் தவறி,
நடுநிலைமையின்றி வாழ்பவன் உயர்ந்த குடியே அன்று. இது தான் திருவள்ளுவர் சொல்ல
வந்த கருத்து. பிறப்பால் தாழ்ந்த குடியில் பிறந்தாலும், நேர்மையாக வாழ்பவன்
உயர்ந்த குடி தான். இது தான் திருவள்ளுவர் தரும் விளக்கம்.
ஒழுக்கமும் வாய்மையும் நானும் இம்மூன்றும்
இருக்குhர் குடிபிறந் தார். - குறள் 952
உயர்ந்த குடியில் பிறந்தவன் என்று உதடு சொல்வதை விட சிறந்தது. உன்னுடைய நல
;ஒழுக்கமான செயலால் உலகம் உன்னை உயர்ந்த குடியில் பிறந்தவன் என்று
போற்றும்படியாக வாழ வேண்டும். காஞ்சிபுரத்தில் காமுகன் அர்ச்சகர் தேவநாதன்
உயர்ந்த குடி என்று சொல்லப்படும் அந்தனர் சமுதாயத்தில் பிறந்தவன் தான். ஆனால்
அவனை உலகம் உயர்குடியாக ஏற்பதில்லை. காரணம் உயர்ந்த குடியில் பிறந்தாலும்
ஒழுக்கம் தவறியவன். இழிசெயல் செய்தவன், மனிதனாகக் கூட மதிக்கப்படுவதில்லை.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் இன்றைக்கும்
பொருந்துவதாக உள்ளது.
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகைஎன்ப வாய்மைக் குடிக்கு - குறள் 953
தம்மை விட வசதியில் குறைந்த ஏழைக்கு உதவிடும் உள்ளம், இனிய சொற்களைப் பேசுதல்,
பிறரை இகழ்ந்து பேசாதிருத்தல் இவற்றைத் தான் உயர்குடிக்கு இலக்கணமாகக்
கூறுகின்றார் வள்ளுவர். இப்படி நடப்பவர்கள் எல்லாம் உயர்குடி, இப்படி
நடக்காதவர்கள் உயர்குடியில் பிறந்தாலும், அவர்கள் உயர்குடியன்று என்று மிகத்
தெளிவாக விளக்குகின்றார் வள்ளுவர்.
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இவர் - குறள் 954
உயர்ந்த குடியில் பிறந்தவர் கோடிப் பொருளுக்காக தவறான செயல் புரிந்தால் அவர்
உயர்குடியன்று என்பதை தெளிவாக விளக்குகின்றார் வள்ளுவர். தீயவழியில் கோடி
திரட்டுவோர் உயர்குடியன்று.
வழங்குவ துள்வீழ்ந்த கண்ணும் பழங்குடி
பண்யில் தலைப்பிரிதல் இன்று - குறள் 955
சிறிய அளவில் பிறருக்கு தந்தாலும், வழங்குகின்ற உயர்ந்த உள்ளத்தார் உயர்குடி
என்கிறார். அநீதியான வழியில் ஈட்டிய பெரும்பொருளை வாரி வழங்கினாலும், அவர்
உயர்குடியன்று என்பதே இதன் பொருள்.
சலம்பற்றிச் சார்பில் செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்வதும் என்பார் - குறள் 956
வஞ்சனையான தொழில் செய்பவர்கள் யாராக இருந்தாலும், உயர்குடியில் பிறந்து
இருந்தாலும் அவர் உயர்குடியன்று. தாழ்ந்த குடியில் பிறந்தாலும் வஞ்சனை இல்லாத
நேர்மையான தொழில் செய்து உழைக்கும் உண்மை உழைப்பாளிகள் யாவரும் உயர்குடி.
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசாம்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து - குறள் 957
உயர்ந்த குடியில் பிறந்தவர்கள் மிக நேர்மையாக வாழ வேண்டும். பிறர் பழிக்கும்
செயலை ஒரு போதும் செய்யக் கூடாது. அவ்வாறு தவறான செயல் செய்தால், நிலவில்
தெரியும் களங்கம் எல்லோர் கண்களுக்கும் தெரிவது போல அனைவருக்கும் தெரியும்.
எனவே உயர்குடியில் பிறந்தவர்கள் மிக நேர்மையாக வாழ வேண்டும், மிக கவனமாக வாழ
வேண்டும், நேர்மை தவறினால் தவறியவர் உயர்குடியன்று என்கிறார் வள்ளுவர்.
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவளைக்
குளத்தின்கண் அய்யப் படும் - குறள் 958
உயர்ந்த குலத்தில் பிறந்தவன், நல்ல குணத்தில் நாட்டமின்றி கெட்ட வழியில்
நடந்தால் உலகம் அவன் உயர்ந்த குலத்தில் பிறந்தவனா என்பது பற்றி அய்யம்
கொளவார்கள். எனவே நல்வழியிலேயே நடப்பவன் தான் உண்மையான உயர்ந்த குடி.
நல்வழியில் நடப்பவர் எல்லோரும் உயர்ந்த குடி தான். தீயவழியில் நடப்பவர்
எல்லோரும் உயர்ந்த குடியில் பிறந்து இருந்தாலும் அவன் தாழ்ந்தவனே, திருக்குறளை
பல்வேறு கோணத்தில் பொருள் கொள்ளலாம். அது தான் திருக்குறளின் தனிச் சிறப்பு.
நிலத்தில் கிடந்தமை கால்கட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல் - குறள் 959
விளைந்து வரும் பயிர் அந்த மண்ணின் தன்மையைக் காட்டிவிடும். அது போல தீயசொல்
பேசுபவர்களை அவர்களது குலம் காட்டிக் கொடுத்து விடும். அதாவது உயர்ந்த
குலத்தில் பிறந்தாலும் தீய சொற்களை பேசினால் அவன் தாழ்ந்த குலம் தான். தாழ்ந்த
குலத்தில் பிறந்து இருந்தாலும் தீய சொல் பேசாமல் நல்ல சொல் மட்டுமே பேசினால்
அவன் உயர்ந்த குலம்.
நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டும் பார்க்கும் பணிவு - குறள் 960
ஒருவன் நன்மையை விரும்பினார் அவனிடத்தில் நாணயம் இருக்க வேண்டும். அவன்
எல்லோரிடத்திலும் பணிந்து நடத்தல் வேண்டும். உயர்ந்த குடியில் பிறந்தவன் என்ற
ஆவணத்தில் பிறரை மதிக்காமல், பிறரை பணியாமல் வாழ்பவன் உயர்ந்த குடியன்று.
உதட்டளவில் உயர்ந்த குடி என்று உரைப்பவன் உயர்ந்த குடியன்ற.
முடிவுரை : மனிதரில் யார் ? ஒருவர் மனசாட்சிக்கு பயந்து நேர்மையாகவும்,
நாணயமாகவும், ஒழுக்காமாகவும் இன்சொல் பேசி, பிறரை மதித்து, பிறருக்கு பணிந்து,
ஏழைக்கு உதவ இரக்க குணம் படைத்து அறநெறியில் வாழகிறாரே! அவர் தான் உயர்ந்த குடி
என்கிறார் திருவள்ளுவர். மொத்தத்தில் குடிமை உயர்குலம் என்பதை உயர்திணை என்றும்
பொருள் கொள்ளலாம். மனிதனாகப் பிறந்தவன் எல்லாம் மனிதன்று. நல் மனிதனாக வாழ்பவனே
மனிதன்.
அதிகாரம் நமக்கு உணர்த்துவது என்னவென்றால், உயர்குடி என்பது பிறப்பால் அன்று,
செயலால், உயர்ந்த செயல் புரிவோர் யாராக இருந்தாலும் உயர்குடி, தீயசெயல்
புரிவோர் யாராக இருந்தாலும், உயர்ந்த குடியில் பிறந்து இருந்தாலும்
உயர்குடியன்று. எனவே மனிதன், தான் பிறப்பால் உயர்ந்த குடி என்ற செருக்கை
அழித்து, செயலால் உயர்ந்த குடி என்று நிரூபிக்க வேண்டும். பிறப்பால் தாழ்ந்த
குடியில் பிறந்தாலும் வருந்தத் தேவை இல்லை. தனது தூய செயலால், நடத்தையால்
நேர்மையாக வாழ்ந்தால் அவரும் உயர்குடி தான் என்று அழுத்தமாகப் பதிவு
செய்கின்றார் திருவள்ளுவர். மனிதர்கள் யாவரும் இக்கருத்தை உள்வாங்கி உலகப்
பொதுமறையாம் திருக்குறள் வழி அறநெறியில் வாழ்வதே வாழ்க்கை.
உயர்திணை ஆளாகின்றான். மனிதன் உயர்திணை என்பதால் உயர்வாக வாழ வலியுறுத்துவதே
திருக்குறள்.
(லிமெரைக்கூ ) கவிஞர் இரா.ரவி
(லிமெரைக்கூ )
கவிஞர் இரா.ரவி
கண்களுக்கு விருந்து சிலை
காண்போரை வியப்பில் ஆழ்த்தி விடும்
சிற்பியின் நுட்பமான கலை!
குறுகியது இளையோர் உள்ளம்
இமயம் முதல் குமரி வரை
பெருகுது முதியோர் இல்லம்!
நிகரற்ற உறவு அன்னை
உயிர் உள்ளவரை மறக்காதே
உயிராய் வளர்த்தாய் உன்னை
சனி, 21 ஆகஸ்ட், 2010
கவிஞர் இரா.இரவியுடன் ஒரு நேர்காணல்.

கவிஞர் இரா.இரவியுடன் ஒரு நேர்காணல்.
http://www.youtube.com/watch?v=JMw3gwx7abo
http://www.youtube.com/user/tamilauthors#p/a...
http://www.youtube.com/watch?v=n8iffIR9xvo
http://de.video.yahoo.com/watch/3549138/9824693
http://de.video.yahoo.com/watch/3549405/9825267
http://de.video.yahoo.com/watch/5429576/14298549
http://de.video.yahoo.com/watch/5421486/14279316
http://de.video.yahoo.com/watch/5429485/14298402
http://de.video.yahoo.com/watch/5390960/14202088
http://de.video.yahoo.com/watch/5390983/14202069
http://de.video.yahoo.com/watch/5390993/14202123
வியாழன், 19 ஆகஸ்ட், 2010
உலக எழுத்தாளர்கள் மாநாட்டை கொலைக் களமான இலங்கையில் நடத்துவது ஏன்? மறு பரிசீலனை செய்யுங்கள்
இலங்கையில் நடத்துவது ஏன்?
மறு பரிசீலனை செய்யுங்கள்
இலங்கைக்கு சென்ற அசினுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
நடிகர் கருணாஸ் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டது .
கொள்கை இல்லாத கோமாளிகளே போக வேண்டாம்
என்று சொல்லும் போது
லட்சியத்துடன் சிற்றிதழ் நடத்தும் நல்லவர்கள்,
படைப்பாளிகள், எழுத்தாளர்கள் இலங்கை செல்வது சரியா ?
சிந்தித்துப் பாருங்கள்
லட்சக் கணக்கான தமிழ் மக்களை
கொன்று குவித்த அரக்கனுக்கு
தண்டனை ஐநா மூலம் வாங்கித் தராமல்
தமிழினம் ஓயாக் கூடாது.உலகில் வேறு எங்கு வேண்டுமானாலும் நடத்துங்கள்
குற்றவாளி தண்டிக்கப் படும் முன்
கொலைக் களத்தில்இலங்கையில்
மாநாடு நடத்த வேண்டிய
அவசியம் என்ன?
சிற்றிதழை மிகவும் மதித்து
சிற்றிதழ்களில் தொடர்ந்து எழுதி வரும்
படைப்பாளியின் வேண்டுகோள் .
சிங்களன் விரிக்கும் வலையில்
படைப்பாளிகள் விழக் கூடாது..
சிங்களனின் பிரித்து ஆளும்
சூழ்ச்சிக்கு தமிழனம் பலி ஆகக் கூடாது..
இரா .இரவி
www.kavimalar.com
http://tamilparks.50webs.com/
http://eraeravi.wordpress.com/
http://eraeravi.blogspot.com/
www.tamilauthors.com
செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010
திங்கள், 16 ஆகஸ்ட், 2010
வெற்றி உன் கையில்!கவிஞர் இரா. இரவி
விதி என்று வெந்து சாகாதே!
விதி என்று ஒன்றும் கிடையாதே!
தோல்விக்குப் பயந்து வாய்ப்பை விடாதே!
துவண்டு விட்டால் வெற்றி கிடைக்காதே!
எடிசன் தோல்விக்குத் துவண்டு இருந்தால்
இருட்டாகவே இருந்திருக்கும் இந்த உலகம்
என்னால் முடியும் எதுவும் முடியும்
என்றே முயன்றால் இனிதே முடியும்!
சோம்பலை விடுத்துச் சுறுசுறுப்பை பெற்றிடுக!
அகந்தையை விடுத்து அன்பைப் பெற்றிடுக!
அச்சத்தை விடுத்துத் துணிவைப் பெற்றிடுக!
துன்பத்தை விடுத்து இன்பத்தைப் பெற்றிடுக!
தூக்கத்தை விடுத்து உழைப்பைப் பெருக்கிடுக!
வேகத்தை விடுத்து விவேகத்தைப் பெற்றிடுக!
வேதனையை விடுத்து வெற்றியைப் பெற்றிடுக
வெற்றி உன் கையில் என்பதை உணர்ந்திடுக!
வீணாய் அடுத்தவரைப் பழிப்பதை நிறுத்திடுக!
இரா .இரவி புகைப்படங்கள்
இரா .இரவி புகைப்படங்கள்
இரா .இரவி ஒளிப்பேழைகள்
http://de.video.yahoo.com/
http://de.video.yahoo.com/
http://de.video.yahoo.com/
http://de.video.yahoo.com/
http://de.video.yahoo.com/
http://de.video.yahoo.com/
அவள் தலைக்கு கீரிடம் வருகின்றது

ஆயிரம் மலர்கள் மலர்ந்தாலும்
அழகிய ரோஜாவிற்குஇணை உண்டோ ?
காதலுக்கு தூது செல்லும் மலர்
காதலர்களின் தேசிய மலர்
பூக்களில் சிறந்தப் பூ ரோஜா
பூவையர் விரும்பும் பூ ரோஜா
ரோஜாவை சூடிய பின்புதான்
அவள் தலைக்கு கீரிடம்
வருகின்றது
இரா .இரவி
மனிதா திருந்திவிடு கவிஞர் இரா.இரவி

உன்னையும், என்னையும்
பிரிப்பது சாதி என்றால்
அந்த சாதிக்கு இன்றே
சமாதி கட்டு
உன்னையும், என்னையும்
பிரிப்பது மதம் என்றால்
அந்த மதத்தை இன்றே
மயானத்திற்கு அனுப்பு
உன்னையும், என்னையும்
பிரிப்பது பேதம் என்றால்
அந்த பித்தலாட்டத்தை இன்றே
புதைத்துவிடு
உன்னையும், என்னையும்
பிரிப்பது இனம் குலம் என்றால்
அந்த ஈனத்தே இன்றே
தூக்கிலிடு
உன்னையும் என்னையும்
உரித்தாலே வெங்காயம்
ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010
கவிஞர் இரா.இரவியுடன் ஒரு நேர்காணல்.
http://www.youtube.com/watch?
http://www.youtube.com/user/
http://www.youtube.com/watch?
www.kavimalar.com
http://tamilbookmarket.com/
http://eraeravi.blogspot.com/
http://eraeravi.wordpress.com/
www.tamilauthors.com
http://tamilparks.nsguru.com/-
புறாவே நில்
புறாவே நில்
அன்றைய சிபிச் சக்கரவர்த்தி
இன்று இல்லை .
சமாதானப் புறாக்களையே
சமைத்துச் சாப்பிடும்
நவீன சிபிச் சக்கரவர்த்திகள்
உனக்கு நீதி கிடைக்காது இன்று
இரா .இரவி
என்னவளே

என்னவளே
வானில் இருந்து தேவதை வந்தாலும்
வஞ்சி உனக்கு இணை இல்லை
வனப்பில் உன்னிடம் தேவதையும்
தோற்றுப் போவாள்.
இரா .இரவி