இடுகைகள்

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி

நாளிதழ் செய்திகள்.24.8.2026

நன்றி.மக்கள் ஆணையம் நாளிதழ் 24.8.2026

இனியநண்பர் மதுரை உலா ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.

ஆகத்து 26 : " தமிழ்த் தென்றல் " திரு.வி.க அவர்களின் 144 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றத்தின் சார்பில் மன்றத் தலைவர் திரு. என்.எம். மாரி அவர்களின் தலைமையில் " தமிழ்த் தென்றல் " திரு.வி.க அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட இருக்கிறது. இலக்கிய மன்ற நிர்வாகிகள் - தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் வருகை தந்து சிறப்பிக்க அன்புடன் வேண்டுகிறோம். நாள் : திருவள்ளுவராண்டு 2057 மடங்கல் (ஆவணி) 09 ‌‌ 26. 08. 2026 அறிவன் (புதன்) காலை 9.30 மணி நிகழிடம் : மணியம்மை மழலையர் பள்ளி, மதுரை ""தமிழ் வளர்த்த அறிஞரை போற்றுவது தமிழரின் கடமை அன்றோ " வருகை தாரீர் ! அன்புடன் வரவேற்கும் . அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் மதுரை

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி

நன்றி.மாலை முரசு நாளிதழ் 23.8.2026.

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி

23.8.2026. முச்சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில தமிழ்நாடு அரசு செய்தி மக்கள். தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர் முனைவர் இரா. பாஸ்கரன் அவர்களின் இல்லதிருமண விழா இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. மேனாள் - இந்நாள் அமைச்சர் பெருமக்கள் - நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் - அரசு அதிகாரிகள் - சான்றோர பெருமக்கள் பெருந்திரளாக பங்கேற்று மணமக்களை வாழ்த்தி மகிழ்தனர்.கவிஞர் இரா .இரவி மணமக்களுக்கு " கவிகிசுவை " கவிதாசன் வெற்றி பயணம் " நூல்கள் வழங்கி வாழ்த்தினார்

23.8,2026.பனைவிதைகள் நடும் விழா மதுரை, கோசாகுளம் கம்மாயில் மாணவர் தன்னார்வலர்கள் இயக்கம் மூலமாக 1000 பனைவிதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தமிழ் செம்மல் இரவி தலைமை தாங்கி முதல் பனை விதை நட்டு வைத்து தொடங்கி வைத்தார். வழக்கறிஞர் ஜமாலுதீன் மற்றும் ஊக்குவிக்கும் கலாம் வல்லரசு கார்த்தி முன்னிலை வகித்தனர். ஆசிரியரும் சமூக ஆர்வலமான நூருல்லாவின் வழிகாட்டுதலின்படி மாணவர் தன்னார்வலர் இயக்கம் மாணவ மாணவிகள் கோசாகுளம் கம்மாயின் இருபுறங்களிலும் முதல் கட்டமாக 1000 பனைவிதைகள் நட்டு வைத்தனர். அப்துல் ரஹ்மான் மாணவர்களை ஒருங்கிணைத்து நன்றி கூறினார். இந்நிகழ்வில் ஊர் தலைவர்கள், பகுதி வாழ் மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.தன்னார்வ மாணவர்களுக்கு கவிஞர் இரா.இரவி தன் நூல்களை வழங்கிப் பாராட்டினார்