இடுகைகள்

நன்றி.மாலை முரசு நாளிதழ் 23.8.2026.

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி

23.8.2026. முச்சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில தமிழ்நாடு அரசு செய்தி மக்கள். தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர் முனைவர் இரா. பாஸ்கரன் அவர்களின் இல்லதிருமண விழா இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. மேனாள் - இந்நாள் அமைச்சர் பெருமக்கள் - நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் - அரசு அதிகாரிகள் - சான்றோர பெருமக்கள் பெருந்திரளாக பங்கேற்று மணமக்களை வாழ்த்தி மகிழ்தனர்.கவிஞர் இரா .இரவி மணமக்களுக்கு " கவிகிசுவை " கவிதாசன் வெற்றி பயணம் " நூல்கள் வழங்கி வாழ்த்தினார்

23.8,2026.பனைவிதைகள் நடும் விழா மதுரை, கோசாகுளம் கம்மாயில் மாணவர் தன்னார்வலர்கள் இயக்கம் மூலமாக 1000 பனைவிதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தமிழ் செம்மல் இரவி தலைமை தாங்கி முதல் பனை விதை நட்டு வைத்து தொடங்கி வைத்தார். வழக்கறிஞர் ஜமாலுதீன் மற்றும் ஊக்குவிக்கும் கலாம் வல்லரசு கார்த்தி முன்னிலை வகித்தனர். ஆசிரியரும் சமூக ஆர்வலமான நூருல்லாவின் வழிகாட்டுதலின்படி மாணவர் தன்னார்வலர் இயக்கம் மாணவ மாணவிகள் கோசாகுளம் கம்மாயின் இருபுறங்களிலும் முதல் கட்டமாக 1000 பனைவிதைகள் நட்டு வைத்தனர். அப்துல் ரஹ்மான் மாணவர்களை ஒருங்கிணைத்து நன்றி கூறினார். இந்நிகழ்வில் ஊர் தலைவர்கள், பகுதி வாழ் மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.தன்னார்வ மாணவர்களுக்கு கவிஞர் இரா.இரவி தன் நூல்களை வழங்கிப் பாராட்டினார்

இன்று பிறந்த நாளை முன்னிட்டு மூத்தமகன் பிரபாகரன் அகவிழி பார்வையற்றோர் விடுதிக்கு ரூபாய் ஆயிரம் நன்கொடை வழங்கி உள்ளான்

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி

23.8.2026 திருமணத்தில். மணமக்கள் க .சுதர்சன் ,ப .முத்துமாரி என்ற தன்யா ஸ்ரீ ஆகியோருக்கு "உதிராப் பூக்கள்" ",தமிழ் எங்கள் உயிருக்கு மேல் " நூல்கள் வழங்கி வாழ்த்திய வேளை. உடன் மணமகன் அக்கா ராகவி ,மாமா கார்த்திகேயன்

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி