செய்தி
26/07/2026 மாமதுரைக் கவிஞர் பேரவை
சிந்தனைக் கவியரங்கம் 48
தலைப்பு : வரலாற்று வானத்தில் வலம் வரும் தமிழ்
மதுரை வடக்கு மாசி வீதி, மணியம்மை மழலையர் தொடக்கப் பள்ளியில் நடந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. மன்றத்தின் செயலர் கவிஞர் இரா.இரவி வரவேற்றார். மன்றத்தின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமையில் கவியரங்கம் நடந்தது. பொருளாளர் இரா.கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் இரா.வரதராஜன் முன்னிலை வகித்தனர். ஆதிசிவத் தென்னவன் வாழ்த்துரை வழங்கினார். துணைச் செயலர் கு.கி. கங்காதரன் நன்றி கூறினார்.
கவிஞர்கள் இரா.இரவி, இரா.கல்யாணசுந்தரம், இரா.வரதராஜன், கு.கி.கங்காதரன், கி.கோ.குறளடியான், சுந்தரம்பாண்டி, பால் பேரின்பநாதன், முனியாண்டி, அஞ்சூர்யா செயராமன், மு, இதயத்துல்லா, சோ.தமிழன்பன், பா.பொன்பாண்டி, பா.பழனி, சு.பாலகிருஷ்ணன், மா.வீரபாகு, மதுரை மைந்தன், கவிதாயினிகள் அனுராதா, லிங்கம்மாள், சாந்தி ஆகியோர் கவிதை படித்தனர்.
பேராசிரியர் சி.சக்திவேல் எழுதிய 'இவர்களோடு நான்', கவிஞர் கு.பால் பேரின்பநாதன் எழுதிய 'சமுதாய கண்ணாடி', முனைவர் இரா.வரதாராஜன் எழுதிய 'கட்டங்குடி ஸ்ரீமத் மௌனகுரு சுவாமிகள் வரலாறு' என மொத்தம் மூன்று நூல்கள் வெளியிட்டனர்.
நூலாசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து 'கவிமாமணி சி.வீரபாண்டியத் தென்னவன் விருது' வழங்கினர். சிறப்பாக கவிதை பாடிய தமிழன்பன், இதயத்துல்லா இருவருக்கும் பரிசு வழங்கப்பட்டன.
பார்வையாளர்களாக கவிஞர்கள் அரங்க கிரிதரன், பரந்தாமன், சந்தனசெல்வி, தனசிங், மோகனக் கண்ணன் மற்றும் கவிஞர் பால் பேரின்பநாதன் அவர்களின் குடும்பத்தினர், சுகந்தி ஸ்டான்லி, அன்புநாதன் சாமுவேல் ஸ்டான்லி, ஜெமிமா ஸ்டான்லி, ஜெஃப்ரி ஸ்டான்லி, பத்திரிக்கையாளர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாதாமாதம் கவியரங்கம் நடத்துவதற்கு பள்ளியைத் தந்து உதவும் புரட்சிப்பாவலர் மன்றத்தின் தலைவர் பா.வரதராசன் அவர்களுக்கு கவிஞர்கள் அனைவரும் நன்றி கூறினார்கள்.
புகைப்படங்கள் மதுரை உலா ரெ.கார்த்திகேயன் கைவண்ணம்.
--


கருத்துகள்
கருத்துரையிடுக