இனிய காலை வணக்கம் ."
ஒளிவட்ட விளைவு (Halo Effect) என்பது சமூகத்தில் பரவலாகக் காணப்படும் மதிப்பீட்டுக் கோளாறு.
ஒருவரிடம் உள்ள ஒரு குணத்தை வைத்து, மற்ற எல்லாவற்றையும் அதைக் கொண்டே முடிவு செய்து அவற்றைப் பற்றிய கருத்தாக்கத்தை உருவாக்கிக் கொள்வதே ஒளிவட்ட விளைவு. எட்வர்ட் தாண்டிக் என்பவரே இப்பதத்தை உருவாக்கியவர்.
இரண்டு இராணுவ அதிகாரிகளை
அவர்களுடைய சிப்பாய்களின் குறிப்பிட்ட தன்மைகளை மதிப்பீடு செய்யும்படி சொன்னார். அவர்கள் அந்தச் சிப்பாய்களை உடலமைப்பு, அறிவு, தலைமைப் பண்பு போன்றவற்றைக் கொண்டு மதிப்பிட்டனர். அவர்கள் பெரும்பாலும் உடலமைப்பை வைத்தே மற்றவற்றையும் மதிப்பீடு செய்தனர் என்பது தெரிந்தது.
அழகாக இருப்பவர்கள் புத்திசாலிகளாக இருப்பார்கள், சிவப்பாக இருப்பவர்கள் சுத்தமாக இருப்பார்கள், நன்றாகப் பேசுகிறவர்கள்
திறமைசாலிகளாக இருப்பார்கள் போன்ற பல ஒளிவட்டக் கற்பனைகளை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம். படிப்பில் கெட்டிக்காரனாக இருந்தால், மற்ற எல்லாவற்றிலும் திறமைசாலியாக இருப்பான் என்றெல்லாம் நாம் முடிவு செய்துவிடுகிறோம்.
ஒளிவட்ட விளைவு பல நேர்முகத்
தேர்வுகளிலும், ஆளுமைத் தேர்வுகளிலும் வெளிப்படுவதைப் பார்க்கலாம்.
முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப 470&471
இந்த நாள் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிரம்பிய நாளாக அமையட்டும்.
மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! கவிதா வெளியீடு, 8, மாசிலாமணி தெரு, பாண்டி பசார், சென்னை-600 017. விலை : ரூ. 180. ***** புதுக்கவிதை என்று சொன்னவுடன் அனைவரின் நினைவிற்கும் மோனையைப் போல முந்தி வந்து நிற்பவர் கவிஞர் மு. மேத்தா. கவி வேந்தர் பட்டம், பரிசு, விருது, பாராட்டு என்று பல பெற்று இருந்த போதும், எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாத எளிய மனிதர், இனியவர், பண்பாளர், பந்தா எதுவும் இல்லாத மாமனிதர், பெரும்பாலும் அவர் மதுரைக்கு வரும்போதெல்லாம் சந்திப்பது உண்டு. தொடர்வண்டி நிலையம் வரை சென்று வழியனுப்பியதும் உண்டு. தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களுடன் நான் உள்பட பட்டிமன்ற குழுவினர் அனைவரும், கவிவேந்தர் மு. மேத்தா அவர்களின் சென்னையில் உள்ள இல்லத்திற்கு முன்அறிவிப்பு இன்றி சென்று இருந்தோம். அவர் சென்னைக்காரர்கள் போல இல்லாமல் பழங்கள் வழங்கி உபசரித்து கலந்துரையாடி வழிஅனுப்பி வைத்தார். அப்போது முனைவர் பட்ட ...

கருத்துகள்
கருத்துரையிடுக