படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

இனிய காலை வணக்கம் ." அதைப்போலவே முத்திரை குத்தும் பழக்கமும் நம்மிடம் இருக்கிறது. 'ஆண்கள் வீட்டு வேலைகளைச் சரியாகச் செய்ய மாட்டார்கள்' 'பெண்கள் சரியாகக் கார் ஓட்ட மாட்டார்கள்' 'முதலாளிகள் என்றால் திமிரின் மொத்த வடிவம்' 'பணக்காரர்கள் தன்முனைப்புடையவர்கள்' என்பன போன்ற பல பொதுப்படையான முடிவுகளை நாம் வைத்திருக்கிறோம். இதுதான் முத்திரை குத்துதல். சிலரைப் பார்த்தவுடனேயே, அவர்களைப் பற்றிய தீர்மானத்திற்குத் தாவுவதே முத்திரை குத்துதல். உடனடியாக அவர்களைப் பற்றிய தீர்ப்பு சொல்லிவிடுவோம். ஒருவரைப் பார்த்தவுடனேயோ, அவர் மதத்தையோ, இனத்தையோ, கல்வித்தகுதியையோ கேட்ட மாத்திரத்திலேயே அவர்களைப் பற்றி முடிவுக்கு வருபவர்கள் உண்டு. தன்னையே சான்றாண்மையின் இலக்கணமாக எண்ணி அதிலிருந்து மாறுபடுபவர்கள் மீதெல்லாம் முத்திரை குத்துவது மனிதர்கள் பலரது இயல்பு. " முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப 471 இந்த நாள் இனிமையான நாளாக அமையட்டும்.

கருத்துகள்