முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"சிந்தனைக்கவிஞர் கவிதாசன் அவர்களின் வெற்றி முழக்கம்" நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி .வாழ்த்துரை சிந்தனைக்கவிஞர் கவிதாசன்

"சிந்தனைக்கவிஞர் கவிதாசன் அவர்களின் வெற்றி முழக்கம்" நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி .வாழ்த்துரை சிந்தனைக்கவிஞர் கவிதாசன் `என் எண்ணங்களுக்கு வண்ணம் தீட்டுகிறார்’ - சிந்தனைக் கவிஞர் கவிதாசன் இயக்குனர் மற்றும் தலைவர் மனிதவள மேம்பாட்டுத்துறை ரூட்ஸ் நிறுவனங்கள், கோவை. “சிக்கனத்தில் சிறந்த சிக்கனம் சொற்சிக்கனம்” என்பார் முதுமுனைவர். இறையன்பு, இ.ஆ.ப அவர்கள். அதற்கு ஏற்ப தனது சிந்தனையில் மலரும் குறுங்கவிதைகளால் என்னுள் நிறைந்தவர் கவிஞர் இரா. இரவி அவர்கள். அவருடைய கவிதைகளுக்கு நானும் தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன். அவர் என் மீது கொண்டுள்ள எல்லையற்ற அன்பின் வெளிப்பாடாக எனது படைப்புகளை வாசித்து வாசித்து வாழ்த்துப் பொழிவில் என்னை எப்பொழுதும் நனைய வைத்து, மகிழ வைப்பதில் முந்திக் கொள்வார். மேதகு ஏ.பி.ஜெ. அப்துல்கலாம், அவர்களுடன் 1994 முதல் 2014 வரை எனக்கு நிகழ்ந்த அனுபவங்களுடன், பல்வேறு அறிஞர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், கவிஞர்கள், உயரதிகாரிகள், என 18க்கும் மேற்பட்டோருக்கு ஏற்பட்ட அனுபவங்களைத் தொகுத்து “உலக உத்தமர் கலாம்” என்ற நூலினை 2015ம் ஆண்டு கோவையில் வெளியிட்டோம். அந்நூலுக்கு அழகு சேர்க்கும் விதமாக, கவிஞர். இரா. இரவி அவர்கள் வழங்கியுள்ள மாமனிதர் அப்துல்கலாம் என்ற கட்டுரை பாராட்டுக்குரியது. சமீபத்தில், கோவை, இராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி நடத்திய எனது படைப்புகள் மீதான பன்னாட்டு ஆய்வில், கவிஞர் இரா.இரவி அவர்களும் பங்கேற்று, ”கவிதாசனின் தன்னம்பிக்கை சிந்தனைகள்” என்ற தலைப்பில் வழங்கிய கட்டுரை, ஆய்வுக் குழுவினரால், மிகச்சிறந்த கட்டுரையாக தேர்வு செய்யப்பட்டு பரிசும் பாராட்டும் பெற்றது, மகிழ்வான தருணம். அதைத் தொடர்ந்து, எனது பல்வேறு நூல்களை நீங்கள் ஆய்வு செய்து, நூலாக்கினால், வாசகர் உலகம் மட்டுமல்ல நானும் மகிழ்வேன் என அவரை வேண்டிக் கொண்டதன் விளைவாக உருவாகியுள்ளதுதான் இந்நூல். இந்நூலை மிகவும் சிறப்பாக உருவாக்கியுள்ள கவிஞருக்கும், இந்நூலை வெளியிட்டுள்ள வானதி பதிப்பகத்தாருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்து மகிழ்கின்றேன். என்றென்றும் தன்னம்பிக்கையுடன் (கவிதாசன்) 24, கவியரங்கம், பிருந்தாவன் கார்டன் மணியகாரம்பாளையம் சாலை கணபதி, கோவை – 641 006. அலைபேசி : +91 98946 83013 (காலை 7 மணி முதல் 8 மணி வரையில் மட்டும்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! கவிதா வெளியீடு, 8, மாசிலாமணி தெரு, பாண்டி பசார், சென்னை-600 017.  விலை : ரூ. 180. *****        புதுக்கவிதை என்று சொன்னவுடன் அனைவரின் நினைவிற்கும் மோனையைப் போல முந்தி வந்து நிற்பவர் கவிஞர் மு. மேத்தா.  கவி வேந்தர் பட்டம், பரிசு, விருது, பாராட்டு என்று பல பெற்று இருந்த போதும், எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாத எளிய மனிதர், இனியவர், பண்பாளர், பந்தா எதுவும் இல்லாத மாமனிதர், பெரும்பாலும் அவர் மதுரைக்கு வரும்போதெல்லாம் சந்திப்பது உண்டு.  தொடர்வண்டி நிலையம் வரை சென்று வழியனுப்பியதும் உண்டு.        தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களுடன் நான் உள்பட பட்டிமன்ற குழுவினர் அனைவரும், கவிவேந்தர் மு. மேத்தா அவர்களின் சென்னையில் உள்ள  இல்லத்திற்கு முன்அறிவிப்பு இன்றி சென்று இருந்தோம்.  அவர் சென்னைக்காரர்கள் போல இல்லாமல் பழங்கள் வழங்கி உபசரித்து கலந்துரையாடி வழிஅனுப்பி வைத்தார்.  அப்போது முனைவர் பட்ட ...

திருமண விழா.இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்

நன்றி .கவிஞர் பாரதி சுகுமாரன்

  நன்றி .கவிஞர் பாரதி சுகுமாரன் தமிழ் மொழி வளர்ச்சியில் அக்கறை கொண்டு... தமிழ் மொழியை முன்னெடுத்துச் செல்லும் பணியில் அமைப்புகள்... இயக்கங்கள்... களப்பணிகள்... என்று எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல், திடீர் இலக்கியவாதியாகாமல் தொடர்ந்து செயல்பட்டு வரும் தமிழ்ப்பணிச் செம்மல்களை அடையாளம் காட்டுவதே இப்பதிவின் நோக்கம். 2021 ஜனவரி 24 அன்று உலகத்தமிழ்ப் பண்பாட்டுச்சங்கம் நடத்தும் தமிழ் - தமிழர் எழுச்சி மாநாட்டில், உலகத் தமிழ்ப் பண்பாட்டுச் சங்கத்தின் தலைவர்.பாவரசு.பாரதிசுகுமாரன் "தமிழ்ப்பணிச்செம்மல்" என்ற விருதினை இவர்களுக்கு வழங்கிட உள்ளார்* *மதுரை மாவட்டம், கவிஞர்.இரா.ரவி* *தமிழ்ப்பணியில் தம்மை முழுமைய ஈடுபடுத்திக்கொண்டு, விமர்சன வித்தகராகி, பல தமிழறிஞர்களின், படைப்பாளர்களின் நூல்களை ஆய்வு செய்து வருபவர், மதுரை மாவட்ட இலக்கிய உலகில் நன்கு அறியப் பட்டவர், அமைதியாக தொடர்ந்து தமிழ்ப்பணியாற்றி ஹைக்கூ கவிதை உலகில் தனி முத்திரை பதித்து வரும் ரவி அவர்களுக்கு இவ்விருதை வழங்குவதில் மகிழ்கிறோம்* 1 R Ravi Ravi