மதுரை உலா ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.மாமதுரைக் கவிஞர் பேரவை - கவியரங்கம் - 34- அண்டை மொழிகள் அழிந்தது ஏன் ? .கவியரங்கம் - 34
மதுரை உலா ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.மாமதுரைக் கவிஞர் பேரவை - கவியரங்கம் - 34- அண்டை மொழிகள் அழிந்தது ஏன் ?
.கவியரங்கம் - 34
மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக்கவியரங்கம், மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் நடந்தது.
" அண்டை மொழிகள் அழிந்தது ஏன் ?" எனும் தலைப்புபில் கவியரங்கம் நடந்தது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.
தலைவர் பேராசிரியர் சி .சக்திவேல் தலைமையில் கவியரங்கம் நடந்தது. செயலர் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா .இரவி வரவேற்றார்.
தலைவர் கவிஞர் பேராசிரியர் சக்திவேல் அவர்கள் தலைமையில் ,கவிஞர்கள் இரா .இரவி , முனைவர் இரா.வரதராசன், , இராம பாண்டியன்,பால் பேரின்பநாதன், குறளடியான், ச. லிங்கம்மாள்,அனுராதா , மா .முனியாண்டி , அஞ்சூரியா க.செயராமன் ,தென்காசி புலவர் ம. ஆறுமுகம், இளையான்குடி இதயத்துல்லா,ந .சுந்தரம் பாண்டி ,பா .பழனி , ஆகியோர் கவிதை பாடினார்கள்.
பேரவையின் சார்பில் சிறப்பாக கவிதை பாடிய நால்வருக்கு தென்காசி திருவள்ளுவர் கழகம் வெளியிட்ட திருக்குறள் உரை நூல் பரிசாக வழங்கினர் .துணைச்செயலர் கவிஞர் கங்காதரன் கவிதையை தலைவர் சக்திவேல் வாசித்தார்.துணைத்தலைவர் இரா.வரதராஜன் நன்றி கூறினார்
கவியரங்கம் நடத்த மாதாமாதம் மணியம்மை பள்ளியை நன்கொடையாகத் தந்து உதவும் இப்பள்ளியின் தாளாளர்,புரட்சிப் பாவலர் மன்றத்தின் தலைவர் பி . வரதராசன் அவர்களுக்கு கவிஞர்கள் நன்றி கூறினார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக