73. கார்-Altrocumulus & 74. மை-Altostratus - இலக்குவனார் திருவள்ளுவன் கார்-Altrocumulus

73. கார்-Altrocumulus & 74. மை-Altostratus - இலக்குவனார் திருவள்ளுவன் கார்-Altrocumulus கடல் முகந்து வந்தன்று, கார்! (முல்லைப்பாட்டு : வெண்பா 2) காரும் ஆர்கலி தலையின்று. தேரும் (அகநானூறு : 54.3) கார் புறந்தந்த நீருடை வியன் புலத்துப் (குறுந்தொகை : 162.1) தளி தரு தண் கார் தலைஇ (நற்றிணை : 316.9) கார்கலித்து அலைப்ப (ஐங்குறுநூறு : 496.2) என்பன போல் சங்க இலக்கியத்தில் 139 இடங்களில் வந்திருந்தாலும் கார் முகிலையும் கார் பருவத்தையும் இச் சொல் குறிக்கின்றது. 5000 பேரடி(மீட்டர்) உயரத்தில் மழை பெய்யும் நிலையில் உள்ள இடைக்குவிப்பு முகில் அல்திரோகியூமுலசு/Altrocumulus எனப்படுகின்றது. மழைக்கருக் கொண்டு கருமையாக உள்ள முகிலாகிய கார் எனப்படுவது இதுவே ஆகும். கார்-Altrocumulus 74. மை-Altostratus 6000 பேரடி(மீட்டர்) உயரத்தில் உள்ள இடைஅடுக்கு முகிலே மை என்பது. மை(110) எனில், கருநிறம், வண்டி மை, பசுமை, குற்றம் என்பன போன்று பல பொருள்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் முகில் என்பது. மைபடு சென்னி (கலித். 43), “மைபடு மால்வரை”(நற்றிணை : 373:3. ) “மைபடு சிலம்பின்” (குறுந். 371 & பரிபாடல் : 16:2) “மைபடு குடுமிய குலவரை” (பரிபாடல் : 15:9-10) என்னுமிடங்களில், ‘மை’ மலைகளில் தவழும் முகிலைக் குறிக்கின்றது. மழைக் கருக்கொண்டபின் கருமையாய் அமையும் அடுத்த நிலையாகிய இது அல்தாசுதிரட்டசு/Altostratus எனப்படுகின்றது. மை-Altostratus – இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள்