*உலக சிட்டுக்குருவிகள் தினம்*இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

*உலக சிட்டுக்குருவிகள் தினம்* தற்போது சிட்டுக்குருவிகள் எண்ணிக்கையில் குறைந்து, அழிவை சந்தித்து வருகின்றன. இந்தியாவில் பறவையினங்கள் அழிவதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. வயலில் உபயோகிக்கிற பூச்சுக்கொல்லிகள் மற்றும் கால்நடைகளுக்கு கொடுக்கப்படுகிற எதிர் உயிர்க் கொல்லிகள் என இன்னும் பல காரணிகள் முக்கியமானதாக கருதப்படுகிறது. சமீபமாக அலைபேசி கோபரங்களால், சிட்டுக்குருவிகளுக்கு அழிவு ஏற்படுகின்றன என்கிற தகவலுக்கான ஆதாரப்பூர்வமான தரவுகள் நம்மிடையே இல்லை. கதிரியக்கத்தால் எல்லா ஜீவராசிகளுக்கும் தீங்கு என்பதை நாமறிவோம், மற்ற பறவையினங்களை தவிர்த்து சிட்டுக்குருவிகளுக்கு மட்டும் என்பதாக முன்னிறுத்தப்படுகிற செய்தியில் உண்மையில்லை. சிட்டுக்குருவிகள் வயல்களில் விளைச்சலைப் பாதிக்கும் புழு, பூச்சி இனங்களை சாப்பிடும். அதனால் சிட்டு குருவியை விவசாயிகளின் நண்பன் என்பார்கள்.ஆனால், தற்போது வயல்வெளிகளில் பூச்சி மருந்து தெளிப்பதால், சிட்டுக் குருவிகளுக்கு சிறு பூச்சிகளும் கிடைப்பதில்லை. கம்பு, கேழ்வரகு, திணை, சாமை போன்ற சிறு தானியங்களை அதிகம் உண்ணும். தற்போது இதுபோன்ற உணவு வகைகள் எளிதாக கிடைப்பதில்லை. உண்மையில் சிட்டுகுருவிகள், வீடுகளும், மனித நடமாட்டமும் நிறைந்த பகுதிகளுக்கு, காட்டில் இருந்து வந்த பறவைகளே. முன்பு இருந்தது போல இப்போது நம் குடியிருப்பு கட்டட வடிவமைப்புகள் அவை கூடு கட்டுவதற்கு உகந்ததாக இல்லையென்பதும், அதற்கான தானிய வகைகள் எளிதாய் வாசலிலும், மொட்டை மாடியிலும் கிடைக்கிற சூழல் இல்லாத இன்றைய நாட்களில் அவை காட்டுக்கே சென்றிருக்கவேண்டும்.நாம் வாழ்ந்து கொண்டிருந்த அந்த சூழல், சிட்டுகுருவிகளை சுண்டி இழுத்ததால், காட்டில் இருந்தவை மனித குலம் வசித்து வந்த இடங்களை நோக்கி வந்தன. அதற்கான உணவும், உறைவிடமும் சரிவராத சூழலில் மறுபடியும் காட்டிற்குள் சென்றிருக்க வேண்டும். சிட்டுக்குருவிகள் அழிந்து கொண்டிருக்கின்றன என்பதை விட, மனிதர்களை விட்டு அகன்றுவிட்டது என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்! விரதமிருந்து படையல் சோற்றை பறவைகளுக்கு வைக்கிற போது, அப்போதெல்லாம் ஒன்றிரண்டு அழைப்புக்குள், வந்து கத்துகிற காகங்கள், இப்போது எத்தனை முறை அழைத்தாலும் நம் வீட்டு கூரையிலும், மதில் சுவரிலும் வந்து உட்காருவதில்லை. காகங்கள், குருவிகள் காணாமல் போனதற்கும் நகரமயமாக்கலில் தொலைந்துப் போன சூழலியல் மாற்றம் தான் காரணமாக இருக்க முடியும்.., நம் வீடு தேடி வரும் சிட்டு குருவிகளுக்கு தண்ணீர், தானியங்கள் வைப்பதை வழக்கமாக்கி கொள்வோம்; வெளியேறிய விருந்தாளிகள் விருப்பத்துடன் அடிக்கடி வந்து போவார்கள். இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

கருத்துகள்