இரும்பின் முதல்வன் தமிழன் - கவிஞர் இரா. இரவி

இரும்பின் முதல்வன் தமிழன் - கவிஞர் இரா. இரவி ***** இரும்பைக் கண்டுபிடித்த முதல்வன் தமிழன் இரும்பால் ஆயுதங்கள் செய்திட்டவன் தமிழன் கல்ஆயுதம் தாண்டி யோசித்த தமிழன் கல்லைவிட கடினமான இரும்பாயுதம் செய்தான் இரும்பை உருக்கும் நுட்பம் கற்றவன் தமிழன் இரும்புத் தொழிற்சாலை வடிவமைத்தவன் தமிழன் ஐயாயாயிரத்து முன்னூறு ஆண்டுக்கு முன்பே இரும்பை அகிலத்திற்கு அறிவித்த அறிவாளி தமிழன் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றியது உண்மையானது உலகின் முதல்மொழி தமிழ் உரைக்கின்றனர் உலகின் முதல்மனிதன் தமிழன் உரைக்கின்றனர் மொழியியல் ஆய்வாளர்களின் அறிவார்ந்த கூற்று முன்மொழிந்தவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் ஆய்வக முடிவுகளும் அறிவித்தனர் அகிலத்திற்கு அனைத்து மக்களுக்கும் அறிவித்தார் தமிழக முதல்வர் பழம்பெருமை பேசியதில் பொய் இல்லை பழம்பெருமை இன்று மெய்யாகி விட்டது பல்லாயிரம் ஆண்டு பழைமையானது எம்தமிழ் சிலநூறு ஆண்டு இந்தி எமக்கு எதற்கு? கட்டாயமாக்கினால் கட்டாயம் வெறுப்போம் கடைசியில் தமிழ்நாடே வெல்லும் உணருங்கள் மீண்டும் மொழிப்போருக்குத் தள்ளாதீர் எங்களை மும்மொழியை எந்நாளும் ஏற்கவே மாட்டோம்.

கருத்துகள்