கவியரங்கம் - 29 -முனைவர் இரா .வரதராசன்- தமிழ் மண்ணில் தவ யோகிகள் கவிதை நூல் வெளியீடு . 29.12.2024 கவியரங்கம்
கவியரங்கம் - 29 -முனைவர் இரா .வரதராசன்- தமிழ் மண்ணில் தவ யோகிகள்
கவிதை நூல் வெளியீடு .
29.12.2024 கவியரங்கம்
மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக்கவியரங்கம், மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் நடந்தது.
"பாரதியின் ஆத்திசூடி " என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது.
மாதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம், மதுரை, வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.தலைவர் பேராசிரியர் சி .சக்திவேல் தலைமையில் கவியரங்கம் நடந்தது தமிழ்ச்செம்மல் செயலர் கவிஞர் இரா.இரவி வரவேற்றார் .பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் முனைவர் இரா .வரதராஜன் முன்னிலை வகித்தனர் .
முனைவர் இரா .வரதராசன் எழுதிய "தமிழ் மண்ணில் தவ யோகிகள்" "எனும் கவிதை நூல் வெளியிட்டனர் .
கவிஞர்கள் இரா .இரவி முனைவர் இரா .வரதராசன், இரா .கல்யாணசுந்தரம், கு .கி கங்காதரன், புலவர் மகா . முருகு பாரதி,குறளடியான் ,அழகையா , பிளவர் ஆருகமுகம் லிங்கம்மாள், முனியாண்டி,அழகையா, , அஞ்சூரியா க .செயராமன் ,பா.பழனி, கு .பால் பேரின்பநாதன் ,முனைவர் ஸ்ரீ வித்யா ,சு .பாலகிருட்டிணன் ஆகியோர் கவிதை பாடினார்கள்.
சிறப்பாக கவிதை பாடிய கு .பால் பேரின்பநாதன் ,முனைவர் ஸ்ரீ வித்யா இருவரும் ,தமிழறிஞர் அழகுராஜன் வழங்கிய திருக்குறள் நூல் பரிசாகப் பெற்றனர் .
துணைச்செயலர் கு .கி கங்காதரன் முன்னிலை உரையாற்றினார். நன்றி கூறினார்
பார்வையாளர்களாக செந்தமிழ்க் கல்லூரி விரிவுரையாளர் அதி வீர பாண்டியன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கவியரங்கம் நடத்த மாதாமாதம் மணியம்மை பள்ளியை நன்கொடையாகத் தந்து உதவும் இப்பள்ளியின் தாளாளர், மன்றத்தின் தலைவர் பி . வரதராசன் அவர்களுக்கு கவிஞர்கள் நன்றி கூறினார்கள்.
படங்கள் மதுரை உலா ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்
கருத்துகள்
கருத்துரையிடுக