30.6.2024. மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் " உலகின் முதன்மொழி தமிழே " என்ற தலைப்பில் சிந்தனைக் கவியரங்கம் நடந்தது . படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.

30.6.2024. மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் " உலகின் முதன்மொழி தமிழே " என்ற தலைப்பில் சிந்தனைக் கவியரங்கம் நடந்தது . படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம். மாதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்தது.தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது செயலர் கவிஞர் இரா.இரவி தலைமையில் நடந்தது .,பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம் முன்னனிலை வகித்தார் உலகத்தமிழாய்வுச் சங்கத்தின் தலைவர் கந்தசாமி,த.மு .எ.க .ச செயலர் பாலசுப்ரமணியன் வாழ்த்துரை வழங்கினார்கள். கவிஞர் முனைவர் இரா .வரதராஜன் எழுதிய "ஏடுகள் தந்த எட்டுத்தொகை " கவிதை நூல் வெளியிட்டனர் .மாமதுரைக் கவிஞர் பேரவையின் செயலர் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி அவர்களின் தலைமையில் " உலகின் முதன்மொழி தமிழே " என்ற தலைப்பில், கவியரங்கம்.நடந்தது கவிஞர்கள் முனைவர் இரா .வரதராசன், இரா .கல்யாணசுந்தரம்,கு .கி .கங்காதரன், ,புலவர் மகா .முருகபாரதி , குறளடியான்,சி .வீரபாகு ,க .,பொன் பாண்டி , ச .லிங்கம்மாள், மு .இதயத்துல்லா ( இளையாங்குடி ) , அஞ்சூரியா க .செயராமன் , , வனஜா,சமயக்கண்ணு ,பா .பழனி ,இராமப்பாண்டியன் ,நா.குருசாமி ,முனைவர் நாகவள்ளி ,பேராசிரியர் முனைவர் பா. ஸ்ரீ வித்யாபாரதி ,செல்வகணபதி ,பா .பழனி ,கலையரசன் ,முனியாண்டி , சிவ. சத்யா ,அஷ்வந்திகா ஆகியோர் கவிதை பாடினார்கள் . மாமதுரைக் கவிஞர் பேரவை நிறுவனர் ,மறைந்தும் மறையாத கவிமாமணி சி . வீரபாண்டியத் தென்னவன் சார்பில் அவரது மகன் ஆதி சிவம் தென்னவன் வழங்கிய விருதுகள் வழங்கினார்கள் .சிறப்பாக கவிதை பாடிய கவிஞர்கள் இராமபாண்டியன் ,வீரபாகு , முனைவர் பா. ஸ்ரீ வித்யாபாரதிஆகியோர் விருது பெற்றனர் . கவியரங்கிற்கு மாதாமாதம் மணியம்மை பள்ளியை நன்கொடையாகத் தந்து உதவும் பள்ளியின் தாளாளர், புரட்க்கவிஞர் மன்றத்தின் தலைவர் பி .வரராசன் அவர்களுக்கு கவிஞர்கள் நன்றி கூறினார்கள். துணைச் செயலர் கு .கி .கங்காதரன், ஆகியோர் நன்றி கூறினார்.

கருத்துகள்