26.5.2024 மாமதுரைக் கவிஞர் பேரவை- " தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது.படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்

26.5.2024 மாமதுரைக் கவிஞர் பேரவை- " தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது. மாமதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் -" தமிழ் எங்கள் உயிருக்கு நேர்", என்ற தலைப்பில் நடந்தது மாதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்தது.தமிழ்த் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது செயலர் கவிஞர் இரா.இரவி தலைமையில் கவியரங்கம் நடந்தது .துணைத் தலைவர் முனைவர் இரா.வரதராசன் வரவேற்றார் .ஆலோசகர் ஆதி சிவம் தென்னவன் ,பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம், துணைச் செயலர் கு .கி .கங்காதரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிதாயினி வனஜா நன்றி கூறினார் . மாமதுரைக் கவிஞர் பேரவையின் செயலர் கவிஞர் இரா.இரவி அவர்களின் தலைமையில், " தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" என்ற தலைப்பில், கவியரங்கம்.நடந்தது கவிஞர்கள் முனைவர் இரா .வரதராசன், இரா .கல்யாணசுந்தரம்,கு .கி .கங்காதரன், ,கி. கோ.குறளடியான், ச .லிங்கம்மாள், மு .இதயத்துல்லா ( இளையாங்குடி ) , அஞ்சூரியா க .செயராமன் , புலவர் மகா .முருகபாரதி ,செ..அனுராதா , வனஜா,சமயக்கண்ணு ,பா .பழனி ,இராமப்பாண்டியன் ,முனியாண்டி , சிவ. சத்யா ,பொன் பாண்டி ஆகியோர் கவிதை பாடினார்கள் . .முனைவர் இரா .வரதராஜன் எழுதிய சரித்திர நாயகர்கள் கவிதை நூல் வெளியிட்டனர் . மாமதுரைக் கவிஞர் பேரவை நிறுவனர் ,மறைந்தும் மறையாத கவிமாமணி சி . வீரபாண்டியத் தென்னவன் சார்பில் அவரது மகன் ஆதி சிவம் தென்னவன் விருதுகள் வழங்கினார் .சிறப்பாக கவிதை பாடிய கவிதாயினி அனுராதா ,கவிதாயினி சிவ சத்யா ,பா .பழனி ஆகியோர் விருது பெற்றனர் . முனைவர் ஸ்ரீ வித்யா பாரதி ,த .மு .எ.க .ச .செயலர் ஜி .பாலசுப்ரமணியன் , பறம்பு நடராசன்,தேவராஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . கவியரங்கிற்கு மாதாமாதம் மணியம்மை பள்ளியை நன்கொடையாகத் தந்து உதவும் பள்ளியின் தாளாளர், புரட்க்கவிஞர் மன்றத்தின் தலைவர் பி .வரதராசன் அவர்களுக்கு கவிஞர்கள் நன்றி கூறினார்கள் .படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்

கருத்துகள்