தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி

தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி ***** தமிழ்மொழி போல் இனிதான மொழி இந்தத் தரணியில் ஏதுமில்லை என்றார் மகாகவி பாரதியார்! தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றார் தன்னிகரில்லா புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார்! தமிழ்மொழி பயின்று திருக்குறள் படிக்க தமிழனாகப் பிறக்க ஆசைப்பட்டார் காந்தியடிகள் ! தமிழர்களின் வீரத்தைக் கண்டு வியந்து தமிழனாகப் பிறக்க விரும்பினார் நேதாசி! பல்லாயிரம் மொழிகள் உலகில் இருந்தாலும் பண்டைத் தமிழுக்கு இணையானது ஏதுமில்லை ! பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேல் அழியாமல் பயன்பாட்டில் இருந்து வரும் சிறந்த மொழி தமிழ் ! என்ன வளம் இல்லை எம் தமிழ்மொழியில் என்று கேட்குமளவிற்கு அனைத்து வளம் மிக்க மொழி ! எண்ணிலடங்கா இலக்கிய இலக்கணங்கள் உள்ளவை எங்கும் உலகம் எங்கும் ஒலித்திடும் தமிழ் ! உலகப்பொதுமறையை உலகிற்கு வழங்கிய ஒப்பற்ற உயர்தனிச் செம்மொழி தமிழ்மொழி ! ரசியாவின் டல்சன் இழைகள் அறையில் உள்ள ரம்மியமான ஒரே இந்திய நூல் திருக்குறள் ! பல்லாயிரம் வயதாகியும் இளமையாக இருக்கும் மொழி பன்னிசை முதலில் இசைத்த மொழியும் தமிழே! தமிழுக்கு ஈடில்லை காண் புகழ்ச்சி அல்ல உண்மை தமிழே உலகின் முதல்மொழி ஆய்வறிக்கை முடிவு!

கருத்துகள்