கவிஞர் இரா.இரவி

கவிஞர் இரா.இரவி தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையில் உதவிச் சுற்றுலா அலுவலராக இரா.இரவி பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். 26.01.1992 குடியரசு நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் இவருக்குச் சிறந்த அரசுப் பணியாளருக்கான விருது வழங்கிச் சிறப்பித்துள்ளார். ‘தமிழ்த் தேனீ’ பேராசிரியர் இரா.மோகன் அவர்களை நடுவராகக் கொண்ட விழிப்புணர்வுப் பட்டி மன்றங்களில் இரவி பேசி வருகிறார். பொதிகை உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சிகளில் இவரது உரைகள் ஒளிபரப்பாகி உள்ளன. இவரது நேர்காணல்கள் ‘பொதிகை’, ‘ஜெயா’, ‘கலைஞர்’ முதலான தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி உள்ளன. ‘ஹைக்கூ திலகம்’, ‘கவியருவி’, ‘கவிமுரசு’ உள்ளிட்ட விருதுகளைப் பல்வேறு இலக்கியக் கழகங்கள் இவருக்கு வழங்கி உள்ளன. இவரது ஹைக்கூ கவிதைகள் கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை தியாகராசர் கல்லூரி, திருச்சி புனித சிலுவை பெண்கள் கல்லூரி, விருதுநகர் வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி, சரஸ்வதி நாராயணன் கல்லூரி, பெருங்குடி மற்றும் திருநெல்வேலி சாராள் தக்கர் தன்னாட்சிக் கல்லூரி ஆகியவற்றின் பாட நூல்களில் இடம்பெற்றுள்ளன. பல இலட்சம் வாசகர்கள் பார்த்த kavimalar.com, eraeravi.blogspot.com உள்ளிட்ட இணையங்களின் ஆசிரியராக இருந்து, இரவி கவிதை, கட்டுரை, நூல் விமர்சனங்கள் எழுதி வருகிறார்; ‘RRAVIRAVI’ என்ற முகநூலிலும் எழுதி வருகிறார்.உலகின் புகழ் பெற்றத் தமிழ் இணையங்களில் இவரது படைப்புகள் இடம்பெற்றுள்ளன. தமிழ்த் தேனீ இரா.மோகன் தொகுத்து, சாகித்திய அகாதெமி வெளியிட்ட ‘தமிழ் ஹைக்கூ ஆயிரம்’ நூலில் இவரது 10 ஹைக்கூ கவிதைகள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. புதுவை எழுத்தாளர் சங்கம் இவரது ‘ஹைக்கூ கவிதைகள்’ நூலைச் சிறந்த நூலாகத் தேர்வு செய்தது; பரிசும் பாராட்டுச் சான்றிதழும் புதுவை ஆளுநர் முன்னிலையில் ஆளுநர் மாளிகையில் புதுவை பல்கலைக் கழகத் துணைவேந்தரால் வழங்கப் பெற்றன. லண்டன் சுடரொளி வெளியீட்டுக் கழகம் உலகளாவிய முறையில் நடத்திய கவிதைப் போட்டியில் இரவி இருமுறை பரிசு பெற்றுள்ளார். மதுரை நகைச்சுவை மன்றத்தின் ஆண்டு விழாவில் முனைவர் கலைமாமணி கு.ஞானசம்பந்தன் அவர்களிடம் இருந்து இரவி ‘வளரும் கலைஞர்’ விருதினைப் பெற்றுள்ளார். கணித்தமிழ்ச் சங்கம் மதுரையில் நடத்திய கணிப்பொறித் திருவிழாவில் ‘தமிழும் அறிவியலும்’ என்ற தலைப்பிலான கவிதைப் போட்டியிலும் இரவி பரிசு பெற்றுள்ளார். ‘இரா.இரவியின் ஹைக்கூ கவிதைகளில் பன்முகப் பார்வை’ என்ற தலைப்பில் மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி இளங்கலைத் தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவர் க.செல்வக்குமார் (பார்வையற்றவர்) ஆய்வு செய்து ஆய்வேடு வழங்கி உள்ளார். வரலாற்றுச் சிறப்பு மிக்க காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் முனைவர் மு .பாண்டி அவர்களை நெறியாளராகக் கொண்டு செல்வன் லெ. சிவசங்கர் தமது ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டத்திற்காக ‘கவிஞர் இரா.இரவியின் ஹைகூக் கவிதைகள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வேட்டினை ஒப்படைத்துள்ளார். 15.10.2015 அப்துல் கலாம் பிறந்த நாளன்று அருள்மிகு மீனாட்சி அரசினர் கல்லூரி, டோக் பெருமாட்டி கல்லூரி, மீனாட்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மூன்றிலும் பேசியதைப் பெருமையாகக் கருதுகின்றார் இரவி. ‘கவிதை உறவு’ ஆண்டு விழாவில் தெய்வத்திரு ‘கலைமாமணி விக்கிரமன்’ விருதை இரவிக்கு நீதியரசர் வள்ளிநாயகம் வழங்கியுள்ளார். கவிமுகில் அறக்கட்டளையின் சார்பில் நடந்த ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் 80-ஆவது பிறந்த நாள் விழாவில் ‘எழுத்தோலை’ விருதைத் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் இரவிக்கு வழங்கியுள்ளார். ‘கவிதை உறவு’ மாநில அளவில் நடத்திய சிறந்த நூல்களுக்கான போட்டியில் கவிஞர் இரா.இரவி எழுதிய ‘கவியமுதம்’ நூலிற்கு இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது. 27.05.2017 அன்று செந்தமிழ்க் கல்லூரியில் நடந்த தனித்தமிழ்க் கவியரங்கில் கவிபாடியதற்கு செந்தமிழ் அறக் கட்டளையினர் இரவிக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினர். 08.10.2017 அன்று சிவகாசியில் கந்தகப் பூக்கள் - நீலநிலா இணைந்து நடத்திய ஹைக்கூ நூற்றாண்டு விழாவில் இரவிக்கு ‘ஹைக்கூ செம்மல்’ விருதினை வழங்கினர். 15.10.2017 அன்று புதுவையில் ‘மூவடி’, ‘மின்மினி’, ‘துளிப்பா’ இதழ்கள் இணைந்து நடத்திய துளிப்பா நூற்றாண்டு நிறைவு விழாவில் இரவிக்குத் ‘துளிப்பாச் சுடர்’ விருது வழங்கினர். கன்னிமாரா நூலக வாசகர் வட்டமும் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் நடத்திய ஹைக்கூ நூல் போட்டியில் இரவியின் ‘ஹைக்கூ உலா’ நூல் மதிப்புறு பரிசைப் பெற்றுள்ளது. 29.07.2018 அன்று சென்னை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்த ஐம்பெரும் விழாவில் அமைச்சர் க.பாண்டிய ராசன் கவிஞர் இரா.இரவிக்கு ‘பாரதி விருது’ வழங்கினார். கவிஞர் இரா.இரவியின் ஹைக்கூ உலா ‘நூலில் உள்ள தன்னம்பிக்கை ஹைக்கூ’ கவிதைகள் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பாட நூலில் இடம்பெற்றுள்ளன. மதுரையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் கவிஞர் இரா.இரவியின் ‘மனதில் ஹைக்கூ’ நூல் பாட நூலாக உள்ளது. ‘பொதிகை மின்னல்’ மாத இதழ் நடத்திய நூல்கள் போட்டியில் ‘ஹைக்கூ 500’ நூல் வென்றமைக்கு 20.10.2019 அன்று நடந்த ஆண்டுவிழாவில் மூவாயிரம் பொற்கிழியும் விருதும் வழங்கினார்கள். 30.12.2003 அன்று நால்வர் தமிழ்க் காலாண்டிதழ் மூவாண்டு விருது விழா 2020-2022 அமரன் கவி விருது வழங்கினார்கள். உலக சாதனை தொடர் நிகழ்ச்சியில் பங்கு பெற்றமைக்காக மூன்று சான்றிதழ் வழங்கி உள்ளனர். 1. மதுரை சிறந்த ஆளுமை என்பதற்கான நேர்முக நிகழ்ச்சி 2. உலக சுற்றுலாதின விழா பன்னாட்டு கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக. 3. பன்னாட்டு கவியரங்கில் தலைமை வகித்து சிறப்புக் கவிதை வாசித்தமைக்கு. கவியரசு கண்ணதாசன் விருதை கவியரசு மின்னிதழ் திமிரி சார்பாக வழங்கினார்கள். தமிழ் ஹைக்கூ உலக மாநாடு 17.07.2022 அன்று கவியரங்கில் ஹைக்கூ கவிதை வாசித்தார். விழா மலரில் ஹைக்கூ கவிதைகள் இடம்பெற்றுள்ளன. ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் பாடத்திட்ட தேர்வுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு கலந்தாய்வில் கலந்து கொண்டார். அரசு கலைக்கல்லூரி மேலூர் முதுகலை M.A. இரண்டாம் ஆண்டு மாணவி ரஞ்சனி “கவிஞர் இரா.இரவியின் உதிராப்பூக்கள்” (தொகுப்பாளர் எழுத்தாளர் ஆத்மார்த்தி), இரா.இரவியின் “தீண்டாதே தீயவை” நூல்களை ஆய்வு செய்கிறார். வழிகாட்டி நெறியாளர் பேராசிரியர் சிங்காரவேலன் அவர்கள். கவிஞர் இரா.ரவியின் ஹைக்கூ கவிதைகளில் பன்முகப்பார்வை அ.மரியநேசம் முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ் ஆய்வு மையம் எ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி, தூத்துக்குடி- 02, நெறியாளர்: ச.மல்லிகா இணைப்பேராசிரியர் தமிழ்த்துறை.எ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி, தூத்துக்குடி- 02 தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் மதுரை மாவட்டத்திற்கான தமிழ்ச்செம்மல் விருது 2022 ஆம் ஆண்டிற்கு பெற்றுள்ளார் . 22.2.2024 அன்று தமிழ் வளர்ச்சித்துறையின் அமைச்சர் மாண்புமிகு சாமிநாதன் அவர்கள் சென்னை ம முத்தமிழ்ப் பேரவை அரங்கில் வழங்கினார்

கருத்துகள்