படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி.🩷*பிப்ரவரி 14*இங்கிலாந்திலிருந்து சங்கர் 💝

படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி.🩷*பிப்ரவரி 14*💖 தமிழ் மண்ணில் வீரமும் காதலும் இரு கண்கள். சங்ககாலப் பாடல்களிலும் அகநானூறு புறநானூறு என்று காதலையும் வீரத்தையும் பாடியவர்கள் நமது முன்னோர்கள். காதலும் வீரமும் மனித குலத்தின் அடையாளங்கள். காதலும் ஒருவகை போர்க்களம் தான். மனம் புகும் போர்க்களம். தமிழர்கள் காதலில் திளைத்த பின்பே இல்லறத்தை நாடியவர் என்பதற்கு, காமத்துப்பால் எழுதிய வள்ளுவர் நமக்குத் துணை நிற்கின்றார். தமிழர்கள் சலிக்காமல் காதலித்தவர்கள் என்பதற்கு போதிய ஆதாரங்கள் இருக்கின்றன. உலகமெங்கும் அனுசரிக்கப்படும் காதலர் தினத்தில், நாமும் கலந்து கொள்வதில் தவறில்லை. இதன் பின்புலத்தில் ஏகப்பட்ட கதைகள். ஆதாரங்களுடன் அல்லது ஆதாரங்கள் இல்லாமல் பல கதைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. இன்றைய நாளில் பரிசுப் பொருட்கள் பரிமாறப்படுகின்றன. பரிசுப் பொருள்கள் எப்பொழுதுமே நம் நினைவுகளுடன் தொடர்புடைய ஒன்றாக இருந்தால் சிறப்பு. அதிலும் அவற்றை நாமே உருவாக்கி பரிசளித்தால் கூடுதல் சிறப்பு. இன்றைய நாளில் காதலின் அடையாளமாகக் கொடுக்கப்படும் மலர்கள், பரிசுகள் பழந்தமிழர் வாழ்விலும் பெரும் பங்கு வகித்தன என்பது ஒரு வரலாற்று உண்மை! குறிஞ்சி நிலத்து குறிஞ்சிப்பூவை, மருத நிலத்து தலைவிக்கு கொடுத்த தலைவன் இங்கே உண்டு. நெய்தல் நிலத்து உப்பை, முல்லை நிலத்து தலைவனுக்குத் தந்த தலைவி இங்கே உண்டு. ரோஜாக்கள் சிவந்து போகும் நாணக் கதைகள், தமிழரின் பரிசு பரிமாறல் கொண்ட இனிமையான பொழுதுகள் என தமிழர் வாழ்வு என்றைக்குமே காதல் ததும்பியதாக தான் இருந்திருக்கிறது. காதல் என்ற வார்த்தைக்கு இவ்வளவு அழகான அர்த்தம் இருக்கும் என்றே தெரியாது. நீ என் வாழ்க்கையில வர்ற வரைக்கும்..., என ஏதாவது ஆத்மார்த்தமா எழுதிக் கொடுப்பதை விட ஆக சிறந்த பரிசு என்னவாக இருக்க முடியும்.மனதில் இருந்து வரும் வார்த்தைகளை விட என்ன பெரிய பரிசு பொருட்கள் இருந்துவிட போகிறது!! எழுதுகோலும், காகிதமும் இணைந்து உருவாக்கும் வார்த்தை கோர்வையை விட, அற்புதமான பரிசை வேறு எந்த பொருட்களாலும் உருவாக்கிவிட முடியாது. Beauty never attracts love, But love attracts beauty என்று ஒரு வரியில் சொல்லிவிடலாம். இருப்பினும் காதல் பற்றிய அனைவரின் பார்வையும் அதுபற்றிய புரிதலும் ஒரே மாதிரியாய் இருப்பதில்லை, அப்படி இருக்கவும் வாய்ப்பில்லை. அழகை மட்டுமே முதன்மையாக கொண்டு வருகிற காதலில், காதல் இல்லையென்றாலும், அன்பை மட்டுமே முதன்மையாக கொண்டு வருகிற காதலில் காதல் இருந்தே ஆக வேண்டும். இதற்கு சில உதாரணங்களை எளிதாய் சொல்லிவிட முடியும். பிரமிக்கத்தக்க அழகியல்ல லைலா, இருந்தும் அவள் அழகை ரசிக்க, மஜ்னுவின் கண்கள் நமக்கு தேவைப்படுகின்றன. அழகு என்கிற வரையறையும், அதன் கட்டுமானமும் கலாச்சாரத்திற்கு கலாச்சாரம் வேறுபடுகிறது. தலை நிறைய பூ வைத்திருக்கிற நம் தேசத்து பெண், நமது கண்ணுக்கு குளிர்ச்சியாய் தெரிவது, வேறொரு தேசத்தின் கலாச்சார பின்னணியில் இருந்து வந்தவருக்கு மிரட்சியாக தெரியலாம். காதல் என்பதை வரையறுக்க சொன்னால் யாராலும் எளிதாக சொல்லமுடிவதில்லை. நிபந்தனையற்ற அன்பு தான் காதல் என்கிற தொனியில் பூசி மொழுகிற விதமாய், விதவிதமாய் வார்த்தைகள் விழும். உண்மையில் நிபந்தனையற்ற காதல் என்பதை இலக்கியத்தில் மட்டுமே வாசித்திருக்கிறோம். இயல்பில் அது காணப்படுவதில்லை. காதல் ஒரு உணர்வு அல்ல. காதல் ஒரு செயல். செயலில் இறங்குவோம். *அன்பர்கள் தின வாழ்த்துகள்* இங்கிலாந்திலிருந்து சங்கர் 💝

கருத்துகள்