மலரும் நினைவுகள் துபாயில் நூல் அறிமுக நிகழ்ச்சி

மலரும் நினைவுகள் துபாயில் நூல் அறிமுக நிகழ்ச்சி துபாய் : துபாயில் தமிழ் மொழியில் இருந்து இந்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட "தமிழிலிருந்து இந்தி ஹைக்கூ" நூல் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நூலை தமிழ் மொழியில் மதுரை விமான நிலையத்தில் சுற்றுலாத்துறை உதவி அலுவலராக பணிபுரிந்து வரும் கவிஞர் இரா .இரவி எழுதிய " ஆயிரம் ஹைக்கூ " நூலை இந்தியில் மொழிபெயர்த்தவர் பேராசிரியர் மரிய தெரசா .ஆயிரம் ஹைக்கூ நூலை வெளியிட்டு நான்கு பதிப்புகள் வெளியிட்ட வானதி பதிப்பகம் இந்தி நூலையும் வெளியிட்டுள்ளது. தமிழக தொழிலதிபர் அய்யம்பேட்டை சுலைமான் வெளியிட ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் பெற்றுக்கொண்டார். உடன் சுதிஷ் உள்ளிட்டோர் உள்ளனர். .

கருத்துகள்