தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி

தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி ***** அறுவடைத் திருநாளைக் கொண்டாடும் தமிழினம் அகிலம் போற்றும் அற்புத நாள் பொங்கல் ! பழையன கழிதல் புதியன புகுதல் என்று புதுப்பித்துக் கொள்ளும் நாளே போகிப் பொங்கல் ! புத்தாடை அணிந்து புத்தரிசிப் பொங்கலிட்டு புத்தாண்டை தைத்திருநாளை தொடங்கும் பொங்கல் ! கதிரவனை இயற்கையை வணங்கிடும் நன்னாள் கட்டி வெல்லம் நெய்இட்டு படைத்திடும் பொங்கல் ! விளைந்த கரும்பையும் வைத்து வணங்கும் நாள் வீணான மூடநம்பிக்கைகள் இல்லாத திருநாள் ! மாட்டுக்கு விழா எடுக்கும் ஒரே இனம் தமிழினம் மாட்டுப்பொங்கல் வைத்து மாட்டை வணங்கும் பொங்கல் ! கடற்கரைகளில் சந்தித்து மகிழும் காணும் பொங்கல் காணமுடியாது கொண்டாடாத தமிழர்களை உலகில் ! வீரம்மிக்க ஜல்லிக்கட்டு நடத்தி மகிழும் நாட்கள் வியந்து பார்க்கும் வீரத்தை உலகம் யாவும் ! உலகில் தோன்றிய முதலினமான தமிழினம் இன்று உலகம் முழுவதும் பரந்து வாழ்வது உண்மை ! உலகின் முதல்மொழியான தமிழ்மொழியோ இன்று ஒலிக்காத நாடு இவ்வுலகில் இல்லை உண்மை ! பண்பாடு பறைசாற்றும் பாரம்பரிய திருவிழா பொங்கல் பண்டைத்தமிழர் காலம் தொட்டு நடந்துவரும் பொங்கல் ! கலைநிகழ்ச்சிகள் நடத்தி மகிழும் பொங்கல் காணக் கண்கோடி வேண்டும் காண்போருக்கு. !

கருத்துகள்