உன்னுள் நீ ! கவிஞர் இரா.இரவி.

உன்னுள் நீ ! கவிஞர் இரா.இரவி. உன்னுள் நீ என்றும் இருக்க வேண்டும் உனக்குப் பிடித்தவர் யார் என்றால் நீ ! எனக்கு அப்துல் கலாம் பிடிக்கும் எனக்கு அன்னை தெரசா பிடிக்கும் ! ஆனால் அதற்கு முன்பாக என்னை அளவின்றி எனக்குப் பிடிக்கும் ! நீ யாரையும் காதலிக்கலாம் ஆனால் நீ முதலில் உன்னைக் காதலி ! உன் இதயத்தில் காதலி இருக்கட்டும் உன்னை உன் இதயத்தில் முதலில் வை ! உன்னை நீ முதலில் நேசிக்க வேண்டும் உனக்குப்பின் மற்றவரை நீ நேசிக்கலாம் ! உனக்கு இணை இவ்வுலகில் நீ மட்டுமே உனக்கு இணை இவ்வுலகில் யாருமில்லை ! சாதிக்கப் பிறந்தவன் நீ மனதில் வை சராசரி மனிதன் அல்ல நீ மனதில் வை ! உனக்கு இணை இவ்வுலகில் நீ மட்டுமே உனக்கு இணை இவ்வுலகில் யாருமில்லை ! சாதிக்கப் பிறந்தவன் நீ மனதில் வை சராசரி மனிதன் அல்ல நீ மனதில் வை ! உன்னை நீ மிக மிக உயர்வாக எண்ணு உனக்கு தாழ்வு மனப்பான்மை கூடாது ! ஏன் பிறந்தோம் என்று எண்ணாதே இனிதே பிறந்தோம் என்று எண்ணு ! என்னடா வாழ்க்கை இது வெறுக்காதே என்னுடைய வாழ்க்கை என்று வாழ் ! இன்பம் வந்தால் ஆனந்தக் கூத்தாடாதே துன்பம் வந்தால் சோர்ந்து போகாதே !

கருத்துகள்