5.8.2023 அன்று , மதுரையில் நடந்த விழாவில் ...
💐 இசைத்தமிழுக்கு , தன்
இயல் உரையால் எழுச்சியூட்டிய
🌹 இறையன்பு அவர்களின் ஏற்புரை பேச்சுக்கு நன்றிகள் சொல்வோம் !!
-- 🏵️🌻💐🙏🧚🏽♀️🌻🏵️ --
5.8.2023 அன்று மாலை ..
மதுரை தமிழிசைச் சங்கம் , ராஜா முத்தையா மன்றத்தில் ..
மகிழ் நிறைவுடன் நடந்த ராஜா முத்தையா செட்டியாரின் ..
மதிப்புமிகு 119 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் ..
மரியாதைமிகு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி ..
🌻 அம்மா ஸ்ரீமதி அவர்களின் சிறப்பான தலைமை உரையோடு ..
அதனை தொடர்ந்து , * முத்தையா செட்டியார் நினைவு * பொற்கிழியை ..
அம்மா ஸ்ரீமதி அவர்களிடமிருந்து பெற்ற முனைவர் இறையன்பு ..
அவர்களின் இசை விழா ஏற்புரை மிகவும் எழுச்சியானது ! ..
🏵️ ஆம் !
இசையே இல்லாமல் , இசைத்தமிழை , பல்வேறு இசைக் கதைகளோடு - தன் ..
இலக்கியப் பேச்சால் ( ! ) உணர்ச்சியுடன் உரைத்தது மிகவும் அருமை ! ..
இசையின் வெளிப்பாட்டை , நம் நாடு , வெளிநாடு என்றில்லாமலும் ( ! ) ..
இசையின் உச்சியிலிருந்த ஹரிதாஸை , அவரது மாணவர் தான்சேனையும் , ..
இசையை , புல்லாங்குழலால் இசைத்த புத்தரின் அதிசய நிகழ்வையும் ( ! ) ..
இந்த ஜால்ராவை கண்டுபிடித்தது யாரென்ற ( ? ) நகைச்சுவையும் ( மிகவும் ) அருமை !!
🙏 தமிழிசைச் சங்கத்தின் மூத்த அறங்காவலர் மோகன்காந்தி அவர்கள் ..
தன்னம்பிக்கை பேச்சாளர் முனைவர் இறையன்பு அவர்களை வரவேற்றபோது ..
தன்னுரையில் மூச்சுவாங்கப் பேசி அசந்தார் ! அசந்து வியந்தபோது ( ! ) ..
தமிழிசைச் சங்க * ராஜா முத்தையா மன்றமே * வியந்தது !!
💐 ஆம் !
இறையன்பு எனுமுயர் தமிழ்நாடு அரசின் ( ஓய்வு ) தலைமைச் செயலாளர் ..
இசையை , இசைத்தமிழை , முழுக்க இசையை பற்றியே பேசி ( ! ) ..
இசைத்தமிழ் காவலர் ராஜா முத்தையா செட்டியார் அவர்களை - தன் ..
இயல் ஏற்புரையால் பெருமைப்படுத்திய , இறையன்பு அவர்களுக்கு நன்றிகள் சொல்வோம் !!
-- 🙏 இசைத் தமிழையும் , இசைத்தமிழ் காவலரையும் வணங்கி , வாழ்த்துக்களூடன் ,
💐 மதுரை இலட்சியம் சிதம்பரம் .
( 🇮🇳 தேசிய நல்லிணக்க கவிஞர் & பாடகர் 🇮🇳 ., * இசைத்தமிழுக்கு தன் ... * எனது இலட்சியத்தில் பதிவு . )
--- 🙏🙏🙏🌻🙏🙏🙏---

கருத்துகள்
கருத்துரையிடுக