சிவயோகம் மலர் ஆசிரியர் இலண்டன் கலாநிதி பொன் பாலசுந்தரம் அவர்களுக்கு இனியபிறந்தநாள் நல் வாழ்த்துகள். கவிஞர் இரா.இரவி.

வாழ்க ! வாழ்க ! வாழ்கவே ! அய்யா பொன் பாலசுந்தரம் ! கவிஞர் இரா .இரவி பொன் பாலசுந்தரம் பெயர் மட்டுமல்ல பொன் போன்ற உள்ளத்திற்கும் சொந்தக்காரார் ! தோன்றின் புகழோடு தோன்றுக என்ற திருக்குறளின் இலக்கணம் ஆனவர் ! ஈழத்தில் பிறந்த வீர சிங்கம் அவர் ! ஈகை குணத்தில் நல் மனத்தில் தங்கம் அவர் ! ஈழ மண்ணின் பிறப்பிற்கு பெருமைப் பட்டவர் ! ஈழத்தின் சிறப்பை உலகிற்கு உணர்த்தியவர் ! பத்திரிக்கை ஆசிரியராக இருந்து பணிகள் செய்து தமிழ் வளர்த்தவர் ! தமிழர் என்றவுடன் தம்மால் முடிந்ததை தாமாக வந்து உதவும் உள்ளம் பெற்றவர் ! . கோவையில் சில ஆண்டுகள் வாழ்ந்து கோபுரமாய் உயர்ந்து வழி காட்டியவர் ! மரபுக் கவிஞர் அதலை ராமனுக்கு மதுரையில் கவிதாஞ்சலி நடத்தியவர் ! சிவயோகம் மலர் ஆசிரியராக இருந்து சீர் மிகு மலர்கள் படைத்தவர் ! சீவரத்தினம் அய்யாவின் உதவியால் ஜெகம் போற்றும் மலர்கள் படைத்தவர் ! இலக்கியத்தில் மதி நுட்பம் மிக்கவர் ! இளகிய மனம் பெற்ற நல்லவர் ! பேனா மட்டுமல்ல இவருக்கு கரண்டியும் பிடிக்கத் தெரியும் ! சுவையான மீன் குழம்பு கறிக் குழம்பு சமைப்பதில் சகலகலா வல்லவர் ! சம்மந்தன் அய்யாவின் நட்பின் சமந்தத்தால் சமத்தான செயல் புரிந்தவர் ! உலகளாவிய கவிதைப் போட்டி இருமுறை உலகம் வியந்திட நடத்திட துணை நின்றவர் ! மகத்தான மகள்களை மட்டும் பெற்றவர் ! மற்றவர்களை மகன்களாக மதிப்பவர் ! காலத்தால் அழியாத ஒப்பற்ற கல்வியின் சிறப்பை உணர்த்தியவர் ! இலண்டன் மாநகரில் முத்திரை பதித்தவர் ! இனிய தமிழரின் திறமையைப் பறை சாற்றியவர் ! இலண்டன் புதினம் இதழ் ஆசிரியர் இராஜகோபாலின் குருவாக இருந்தவர் ! எந்த செயலையும் நேர்த்தியாக எந்த நேரமும் திட்டமிட்டு முடிப்பவர் ! பிறந்தோம் வாழ்ந்தோம் என்று வாழாமல் பிறந்தோம் சாதித்தோம் என்று வாழ்பவர் ! வையகம் உள்ளவரை தமிழ் மொழி உள்ளவரை வாழ்க ! வாழ்க ! வாழ்கவே ! அய்யா பொன் பாலசுந்தரம் !

கருத்துகள்