என்றும் வாழ்வான் பாரதி ! கவிஞர் இரா .இரவி !

என்றும் வாழ்வான் பாரதி ! கவிஞர் இரா .இரவி ! வான்புகழ் வள்ளுவருக்கு அடுத்து வந்த கவிஞர்களில் வான்புகழ் பெற்றவன் ! கவியரசர் என்பதனால் அவன் சந்தித்த புவியரசனிடமும் நூல்களையேப் பெற்றவன் ! சிட்டுக்குருவிகளை உள்ளபடியே நேசித்தவன் விட்டு விடுதலையாகிக் கவிகள் வடித்தவன் ! எட்டயபுரம் என்ற ஊரில் பிறந்து அவன் எட்டாத உயரம் பாடலால் தொட்டவன் ! முறுக்கு மீசைக்காரன் மட்டுமல்ல அவன் முண்டாசுக் கட்டிய முத்தமிழ் வேந்தன் ! எளிய தமிழில் இனிய கவி யாத்தவன் எல்லோருக்கும் புரியும்படி எழுதியவன் ! முப்பத்தியொன்பது ஆண்டுகள்தான் அவன் மூச்சு இருந்தது இன்று வரை பேச்சு உள்ளது ! கனகசுப்பு ரத்தினத்தின் குருவாகியவன் கவி பாரதி தாசனை உருவாக்கியவன் ! பன்மொழிகள் அறிந்திருந்த காரணத்தால் அவன் பைந்தமிழன் சிறப்பை செழிப்பை உணர்த்தியவன் ! பாரதி பாடிய பாடல்கள் யாவும் என்றும் பா ரதியாக அழகிய பாடல்கள் ஆனது ! திருவல்லிக் கேணியில் வாழ்ந்து சிறந்தவன் செந்தமிழ்க் கேணியாக இருந்து வென்றவன் ! விடுதலை உணர்வை பாட்டால் விதைத்தவன் விடுதலை அடைந்துவிட்டதாகப் பாடியவன் ! பெண் விடுதலைக்கு பாடல்கள் செய்தவன் பெண்இன உயர்வுக்கு ஏணியானவன் ! அச்சமில்லை என்று பாடிய வீரமகன் அன்பாய் குழந்தைப் பாட்டும் பாடியவன் ! நூற்றாண்டு கடந்தும் இன்றும் வாழ்பவன் நூற்றாண்டு பல ஆனாலும் என்றும் வாழ்வான் !

கருத்துகள்