படைப்புகளில் என்றும் வாழ்வார் வாலி ! மரணம் இல்லை ! கவிஞர் இரா .இரவி !

காவியக் கவிஞர் வாலியே ! கவிஞர் இரா .இரவி ! காவியக் கவிஞர் வாலியே ! உந்தன் மரணம் எங்களுக்கு வலியே ! மாலுமி இழந்த கப்பல் போல நாங்கள் மட்டற்ற கவிஞரை இழந்து தவிக்கிறோம் ! வாலிப வாலி என்பது உண்மை ! வாலிபக்கவியை எண்பது கடந்தும் எழுதியவர் ! புதியவானம் புதிய பூமி என்று எழுதி ! புத்துணர்வை விதைத்தவர் வாலி ! 'ஏமாற்றாதே ! ஏமாறாதே !என்று எழுதி ! எமக்கு மனிதநேயம் கற்பித்த வாலி ! கண் போன போக்கிலே கால் போகலாமா ? காளையரை நெறிப் படுத்திய வாலி ! தரை மேல் பிறக்க வைத்தான் என்று எழுதி ! துயரில் வாடும் மீனவர்களின் கண்ணீர் பாடிய வாலி ! காற்று வாங்கப் போனேன் கவிதை வாங்கி வந்தேன் ! காற்றில் பாட்டில் கலந்து என்றும் நின்ற வாலி ! அக்கிரகாரத்தில் பிறந்த அதிசய மனிதர் வாலி ! அய்யா பெரியார் பற்றியும் கவி வடித்த வாலி ! படைப்புகளில் என்றும் வாழ்வார் வாலி ! மரணம் இல்லை ! கவிஞர் இரா .இரவி ! ஓவியம் வரையும் ரங்கராஜன் என்ற பெயரை ! ஓவியர் மாலிபோல வர வாலி என்று வைத்தார் பாபு ! .ஓவியத்தில் உயர் புகழ் அடையாவிடடாலும் ! கவிதையில் ராஜனாக உயர்ந்தார் வாலி ! திருப்பராய்த்துறை பிறந்து திருவை அடைந்தவாலி! திருவரங்கத்திற்குப் பெருமைகள் சேர்த்த வாலி ! மயக்கமா! கலக்கமா ! கவியரசு பாடல் கேட்டு வாலி! மறுபரிசீலனை செய்து சென்னை தங்கிய வாலி ! சொல் விளையாட்டில் வார்த்தைச் சித்தர் வாலி ! சொக்க வைக்கும் பாடல்களின் ஆசிரியர் வாலி ! பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிக் குவித்த வாலி ! பல்லாண்டுகளாய் திரையில் நிலைத்த நின்ற வாலி ! வாலிபனைப் போலவே என்றும் எழுதிய வாலி ! உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம் .ஜி .ஆர் ! உன் பெயர் பெயர் இடம் பெறாது என்றதும் வாலி ! உலகம் சுற்றும் பன் என்று பெயர் மாற்றவேண்டும் ! உங்களுக்குச் சம்மதமா என்று கேட்ட வாலி ! உடன் சிரித்து ரசித்த உயர்ந்த மனிதர் எம் .ஜி .ஆர் .! எம் .ஜி .ஆருக்கு நான் ஆணையிட்டால் என்று எழுதி! எம் .ஜி.ஆரை ஆணையிடும் பதவிக்கு வர வைத்த வாலி! மல்லிகை என் மன்னன மயங்கும் என்று எழுதி ! மதுரை மல்லிக்கு மங்காப் புகழ் சேர்த்த வாலி ! தனி ஈழத்திற்காகவும் கவிதைகள் வடித்த வாலி ! தனிக் கவிதைகளிலும் முத்திரைப் பதித்த வாலி ! பாடல் கவிதை கதை கட்டுரை வடித்த கவிஞர் வாலி ! படைப்புகளில் என்றும் வாழ்வார் மரணம் இல்லை ! ஓய்வறியா உழைப்பாளி உரத்த சிந்தனையாளர் வாலி ! ஒப்பற்ற கவிதைளை வடித்துத் தந்தவர் வாலி ! கவியரங்கங்களில் தலைமை வகித்தவர் வாலி ! கை தட்டல்களைப் பரிசாகப் பெற்றவர் வாலி ! கண்ணதாசனை தாடி இல்லா தாகூர் என்றார் வாலி ! கற்பனைக் கவியால் தாடி உள்ள தாகூர் ஆனார் வாலி ! கண்ணதாசனை மீசை இல்லா பாரதி என்றார் வாலி ! கற்க்கண்டுக் கவியால் மீசை உள்ள பாரதியானார்வாலி! படைப்புகளில் என்றும் வாழ்வார் வாலி ! மரணம் இல்லை ! மரணம் இல்லை ! மரணம் இல்லை !

கருத்துகள்