.மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்த மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம் படங்கள் .28.8.2022 இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.

.மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்த மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம் படங்கள் .28.8.2022 மாமதுரைக் கவிஞர் பேரவையின் செயலர் கவிஞர் இரா .இரவி வரவேற்றார் . .மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமையில் கவியரங்கம் நடந்தது .முனைவர் வரதராசன் ,கவிஞர் கங்காதரன் முன்னிலை வகித்தனர் .கவிஞர்கள் இரா .கல்யாணசுந்தரம் ,இரா .இரவி ,வரராசன் ,கங்காதரன் ,லிங்கம்மாள் ,குறளடியான் ,முருகுபராதி ,இதயத்துல்லா ,அரங்க கிரிதரன் ,சங்கர நாராயணன் ,செயராமன் ,மா .வீரபாகு ,அஞ்சூரியா செயராம் ,சு .பால கிருட்டிணன் ,கு .பால் பேரின்ப நாதன் ,சாந்தி திருநாவுக்கரசு ,இராம பாண்டியன் ,அனுராதா ,மு .க .பரமசிவம் ,பொன் பாண்டி ஆகியோர் " தமிழால் தலை நிமிர்வோம் " என்ற தலைப்பில் கவிதை படித்தனர். கவிதாயினி சாந்தி திருநாவுக்கரசு எழுதிய காதல் யாழ்கள் ,யாவும் தமிழாய் கவிதை நூல்கள் வெளியிடப்பட்டன .கவிதை பாடிய கவிஞர்கள் அனைவருக்கும் இரு நூல்களும் அன்பளிப்பாக வழங்கினார் நூல்களின் ஆசிரியர் கவிதாயினி சாந்தி இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.

கருத்துகள்

  1. கவியரங்க தொகுப்பு அருமை. . மின்படங்கள் நன்றாக இருக்கிறது.. நன்றி..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக