கண்தானம் ! கவிஞர் இரா .இரவி!

விழிக்கொடை ! கவிஞர் இரா .இரவி! வாழ்கிறான் கொடையில் வள்ளல் கர்ணன் விழிக்கொடை ! வந்தது பார்வை பார்வையற்ற இருவருக்கு விழிக்கொடை ! இறந்தப் பின்னும் இறக்காத விழிகள் விழிக்கொடை ! மண்ணுக்கும் தீயுக்கும் வேண்டாம் மனிதர்களுக்கு வேண்டும் விழிக்கொடை ! கருவிழிகள் அகற்றியது இருள் விழிக்கொடை ! உயிர்ப் பிரிந்தும் உயிர்ப் பெற்றது விழிக்கொடை ! உடல் மாறியும் உயிர் உள்ளது விழிக்கொடை ! குறையை நீக்கி நிறைவாக்கியது விழிக்கொடை ! மரிக்கவில்லை மனிதம் மனிதரில் புனிதம் விழிக்கொடை !

கருத்துகள்