இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் கார்த்திகேயன் கை வண்ணம்.

இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் கார்த்திகேயன் கை வண்ணம். அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்ற 23 ஆம் ஆண்டு விழா மதுரை மணியம்மை தொடக்கப் பள்ளி பெரியார் அரங்கில் 27.03.2022 அன்று மாலையில் மன்றத் தலைவர் திரு. என்.எம். மாரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திரு..சே அழகுசுந்தரம், மாமன்ற உறுப்பினர் திரு. செந்தாமரைக் கண்ணன், திரு. மு. வெங்கடேசுவரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்றத்தின் துணைச் செயலாளர் திரு. கரு. ஆறுமுகம் அவர்கள் வரவேற்பு உரை நிகழத்தினார். மதுரை மாநகர் வடக்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் திரு. கோ. தளபதி அவர்கள் தொடக்கவுரை ஆற்றினார்கள். திருவள்ளுவர் திருவுருவப் படத்தினை திறந்து வைத்து தமிழக அரசின் பேரறிஞர் அண்ணா விருது பெற்ற "நாவுக்கரசர்" நாஞ்சில் சம்பத் அவர்கள் "திருவள்ளுவர் தேவைப்படுகிறார்" என்ற தலைப்பில் இலக்கியப் பேருரை ஆற்றினார்கள். புரட்சிக்கவிஞர் மன்றத்தின் தலைவர் திரு. பி. வரதராசன், உலகத் திருக்குறள் பேரவை மதுரை மாவட்டச் செயலாளர் திரு. அசோக்ராசு, குறும்பா பாவலர் திரு. இரா. இரவி, திருபரங்குன்றம் திருக்கோயில் மேனாள் அறங்காவலர் அரிமா மகா. கணேசன், வழக்கறிஞர் திரு. இராம. வைரமுத்து, கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளர் திரு. டி.வி. அழகர், திரு. இர. கனகவேல் பாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இலக்கிய மன்றத்தின் தீர்மானங்கள் பொருளாளர் திரு. க.வெ. நெடுஞ்சேரலாதன் அவர்களால் படித்து நிறைவேற்றப்பட்டன. மன்றச் செயற்குழு உறுப்பினர்கள் திரு. இல. வெள்ளைச்சாமி, திரு. ப. பாண்டித்துரை மற்றும் தமிழ் ஆர்வலர்கள் ஏரளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர். செயலாளர் திரு. கே.வி. இராமகிருட்டினன் நன்றி கூறலுடன் விழா முடிவுற்றது

கருத்துகள்