படித்து வியந்தவை.கவிஞர் இரா.இரவி. யானையை🐘🐘 பற்றிய சிறப்பான தகவல்கள். .

படித்து வியந்தவை.கவிஞர் இரா.இரவி. யானையை🐘🐘 பற்றிய சிறப்பான தகவல்கள். . யானை 🐘🐘22 மாதங்கள் கருவை சுமக்கும் . யானை🐘🐘 4 வருடங்களுக்கு ஒரு முறைதான் குட்டி போடும். அதன் தும்பிக்கையால் 350 கிலோ எடையை தூக்க முடியும். சில நேரங்களில் இரண்டு குட்டிகள் கூட போடும். ஒரு யானை ஒரு காட்டையே உருவாக்கும். ஒரு நாளைக்கு 200 - 250 கிலோ உணவு சாப்பிடும் . ஒரு நாளைக்கு 100 - 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். 250 கிலோ உணவில் 10% விதைகள் இருக்கும். சாணத்தில் இருந்து 10 கிலோ விதைகள் காட்டில் விதைக்கப்படும். யானை🐘🐘 ஒரு நாளைக்கு 300 - 500 விதைகள் விதைக்கும். யானை🐘🐘 ஒரு நாளில் 100 மரங்களை நடுகிறது. ஒரு வருடத்திற்கு 36500 மரங்கள் நடுகிறது. ஒரு யானை🐘🐘 தன் வாழ்நாளில் 18 லட்சத்து 25 அயிரம் மரம் வளர காரணமாகிறது . அடுத்த முறை நீங்களும்,நானும் யானையை பார்க்கும் பொழுது நம் மனதில் தோன்றக் கூடிய ஒரே காட்சி நாம் பார்க்கும் இந்த காடுகள் மற்றும் இயற்கை வளம் இந்த ஜீவனால் உருவானது என்பதே. யானையை🐘🐘🐘 பற்றிய இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. தூய தமிழில் யானைக்கு🐘 60 பெயர்கள் உள்ளது. யானையின்🐘 இரண்டு தந்தங்களும் சம அளவில் இருக்காது. யானையின்🐘 துதிக்கை 40,000 தசைகளால் ஆனது. இந்தியாவில் ஒரு லட்சம் யானைகள்🐘 இருக்க வேண்டும் என்று கணக்கிடப்பட்ட நிலையில் இப்போது இருப்பது 27312 யானைகள்🐘 மட்டுமே ! யானைகள் 🐘தமக்குள் பேசிக் கொள்ளும் திறன் வாய்ந்தவை. நோயுற்ற யானைகளுக்கு உணவையும், நீரையும் மற்ற யானைகள் ஊட்டும். நோயுற்ற யானைக்கு மற்ற யானைகள் தடவிக் கொடுத்து ஆறுதல் படுத்தும். யானையின் பற்கள் சுமார் 5 கிலோ எடை கொண்டவை. 5 கிமீ தூரத்தில் தண்ணீர்💦💦 இருந்தாலும் அதனை வாசனை மூலம் தெரிந்து கொள்ளும் திறன் கொண்டவை. யானை தன் தும்பிக்கையால் 7.5 லிட்டர் தண்ணீரை💦 எடுத்து குடிக்கும் திறனுடையது. இந்தியாவில் உள்ள பெண் யானைகளுக்கு🐘 தந்தம் கிடையாது. ஆப்ரிக்காவில் உள்ள பெண் யானைகளுக்கு🐘 தந்தம் உண்டு. பொதுவாக பெண் யானைகளுக்கு மதம் பிடிப்பது கிடையாது. கூட்டத்தில் இருக்கும் முதுமை அடைந்த யானை🐘 தான் இறப்பது உறுதி என்று தெரிந்தால் கூட்டத்தில் இருந்து பிரிந்து உண்ணா நோன்பு இருந்து தன் முடிவை தானே தேடிக் கொள்ளும். ஞானிகள் உண்ணா நோன்பு இருந்து சமாதி நிலை அடைவது போல. இப்போது நடந்த பாலக்காடு பெண் யானை🐘 சம்பவமும் அவ்வகையே. இயற்கையை 🏞️🏞️சமநிலை படுத்துவதில் யானையின் பங்கு மிகப் பெரியது. அதை தெரிந்து தான் கேரள அரசு தனது அரசு முத்திரையில் இரண்டு யானைகளை வைத்துள்ளது. அடுத்த முறை நம்மில் யாரவது, ஊருக்குள் யானை வந்தால்,கல் கொண்டும் , பீர் பாட்டில் கொண்டும் அதை தாக்க முற்படாமல் இயற்கையை சமநிலைபடுத்த இற்கையினால் நமக்கு அனுப்பபட்ட ஒரு அருட்கொடையாக பாருங்கள். நன்றி. 🙏 🐘🐘🐘🐘

கருத்துகள்