படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! இறையன்பு.இ .ஆ .ப .அவர்களின் அருமையான பதிவு

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! இறையன்பு.இ .ஆ .ப .அவர்களின் அருமையான பதிவு இன்றைய இளம் வயதினர் சிலருக்கு கணினியை இயக்குவது நன்றாகத் தெரிகிறது.* *ஆனால் பயன்படுத்திய போர்வையை மடித்து வைக்கத்தான் தெரியவில்லை.!!!* *கைப்பேசி அழைப்புகளை அவ்வப்போது சுத்தம் செய்யத் தெரிகிறது.* *ஆனால் சாப்பிட்ட பிறகு தட்டை கழுவி வைப்பதுதான் கடினமாக இருக்கிறது!!!*. *ஆன்லைனில் பயணத்திற்குப் பதிவு செய்யும் வித்தை தெரிகிறது.* *எதிரே அமர்ந்திருக்கும் பயணியைப் பார்த்து புன்னகைக்கத்தான் தெரிவதில்லை!!!*. படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! *வாட்ஸ்அப் குரூப்பில் அன்பு சொட்டச்சொட்ட நண்பர்களிடம் தகவல் பரிமாற முடிகிறது.* *சொந்தப் பெற்றோரிடம் தூக்கியடிப்பது போல பேசத்தான் முடிகிறது!!!*. *எந்த இடத்திலும் ஒரு நிமிடம் தாமதமானால் கோபம் கொப்பளித்துக் கொள்கிறது.* *ஆனால்* *அவர்களுக்காகக் காத்திருக்கும் பெற்றோரின் வலி* *புரிவதில்லை.!!!* *எதைப் பெற்றாலும் உரிமையென எண்ணும் அவர்களுக்கு கடமைகளும் இருக்கின்றன என்பது ஒருபோதும் உரைப்பதில்லை.!!!* ~ *

கருத்துகள்