தன்னம்பிக்கை கவிதைகள் .கவிஞர் இரா .இரவி !

தன்னம்பிக்கை கவிதைகள் .கவிஞர் இரா .இரவி ! திறந்தே இருக்கும் ! கவிஞர் இரா .இரவி ! வாய்ப்பு உன் வாசல் வந்து கதவைத் தட்டுமென்று காத்திருந்து பொன்னான பொழுதை வீணாக்காதே ! வாய்ப்பு எனும் வாசல் தேடி நீ சென்றால் கதவைத் தட்ட வேண்டாம் ! திறந்தே இருக்கும் ! --------------------------------------------------------------------- மன நிலையைப் பெற்றிடு ! கவிஞர் இரா .இரவி ! ஒரே ஒரு முறை முயற்சி செய்து விட்டு தோற்றதும் துவண்டிடும் மன நிலை விடு ! வெற்றி கிட்டும்வரை முயற்சி செய்யும் மன நிலையைப் பெற்றிடு ! ----------------------------------------------------------------------- வாழ்க்கை வசந்தமாகும் ! கவிஞர் இரா .இரவி ! வெற்றி சில நிமிடங்களில் கிட்டிட வாழ்க்கை திரைப்படம் அன்று ! பயிற்சி செய் ! முயற்சி செய் ! தோல்வி கிடைத்தால் காரணத்தை ஆராய்ந்தால் அடுத்தப் போட்டியில் அதனைத் தவிர்த்திடு ! வெற்றி வசமாகும் ! வாழ்க்கை வசந்தமாகும் ! நினைத்தது கிட்டும் ! கவிஞர் இரா .இரவி ! என்னால் முடியும் ! என்றே முயன்றால் ! முயன்றது முடியும் ! என்னால் முடியாது ! என்றே நினைத்தால் ! முயன்றது முடியாது ! யாரை நீ நம்பாவிட்டாலும் ! உன்னை நீ நம்பு ! நினைத்தது கிட்டும் ! இனிதே பயன்படுத்து ! கவிஞர் இரா .இரவி ! பொழுதைப் போக்குவதல்ல பொன்னான வாழ்க்கை ! பொழுதைத் திட்டமிடு ! பழுது நீங்கும் ! ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு வைரம் ! போன பொழுது திரும்ப வராது ! இருக்கும் பொழுதை இனிதே பயன்படுத்து ! நெஞ்சில் நிறுத்து ! கவிஞர் இரா .இரவி ! வென்றவர்களின் வரலாறு படித்திடு ! வென்று நீயும் வரலாறு படைத்திடு ! சாதித்தவர்களின் சாதனை அறிந்திடு ! சாதித்து சாதனை புரிந்திடு ! உண்டு உறங்கி வாழ்வதல்ல வாழ்க்கை ! கண்டு இறங்கி சாதித்து வாழ்ந்திடு ! எதிர்மறை சிந்தனைகளை அகராதியிலிருந்து அகற்று ! நேர் மறை சிந்தனைகளை நெஞ்சில் நிறுத்து ! வெற்றி வசமாகும் ! கவிஞர் இரா .இரவி ! வெந்த சோறு தின்று ! விதி வந்தால் சாவேன் ! என்று சொல்வதை நிறுத்து ! மதியால் சாதித்து வாழ் ! மண்ணுலகம் போற்றிட வாழ் ! சராசரியாக காலம் கழிக்காதே ! சாதிக்கப் பிறந்தவன் நீ ! வித்தியாசமாக சிந்தித்து ! விவேகமாக செயல்படு ! வெற்றி வசமாகும் ! உலகம் வரவேற்கும் ! கவிஞர் இரா .இரவி ! தாழ்வு மனப்பான்மை உன்னை தாழ்த்தி விடும் ! உயர்வாக எண்ணு ! உன்னை நீ உயர்வாக எண்ணு ! உன்னுள் திறமைகள் ஓராயிரம் உண்டு ! இருக்கும் திறமைகளை இனிதே பயன்படுத்து ! உன்னை என்றும் உலகம் வரவேற்கும் !

கருத்துகள்