மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ! கவிஞர் இரா .இரவி !

 



மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ! 

கவிஞர் இரா .இரவி !


பட்டுக்கோட்டையில் பிறந்த பாட்டுக்கோட்டை

பாட்டால் கோட்டை கட்டியவர் கல்யாணசுந்தரம் !


மக்கள் கவிஞர் என்ற பட்டம் பெற்றவர்

மக்கள் மனங்களில் இன்றும் என்றும் வாழ்பவர் !


சங்கம் படைத்தான் காடு சிற்றூரில் பிறந்து

சங்கப் பாடல்களெனப் பாடல் வடித்தவர் !


எளிமையும் இனிமையும் தனி முத்திரை

என்றும் அழியாதப் பாடல்கள் தந்தவர் !


அருனாச்சலனார் விசாலாட்சி தம்பதியர்

அன்போடுப் பெற்ற அற்புதக் கவிஞர் !


கௌரவாம்பாள் கரம் பற்றி மனம் முடித்து

கெளரவம் தந்த கர்வமில்லாக் கவிஞர் !


குழந்தை குமரவேல் பிறந்த ஆண்டிலேயே

குவலயத்தை விட்டு விடைப் பெற்றவர் !


இருபத்தொன்பது ஆண்டுகள் கால வாழ்க்கையில்

இரு நுற்றாண்டுகள் பாடல்கள் புனைந்தவர் !


மண்ணில் வாழ்ந்த காலம் மிகவும் கொஞ்சம்

பண்ணில் வாழும் காலம் என்றும் நிரந்தரம் !


பதினேழு தொழில் செய்த அறிந்த வித்தகர்

பாடல் ஆசிரியராக தனி முத்திரைப் பதித்தவர் !


இன்னும் கொஞ்சம் காலம் வாழ்ந்து இருந்தால்

இமயத்திற்கு இணையாய் இருக்கும் பாடல்கள் !


சின்னப் பயலுக்கு சேதி சொல்லி எழுதியவர்

சின்னப் பாப்பாவிற்கு திருடாதே ! அறிவுறுத்தியவர் !


தம்பிப் பையனுக்கு தூங்காதே என விழிக்க வைத்தவர் !

தமிழ் சமுகத்தின் துக்கத்தை களைத்தவர் !


துள்ளாத மனமும் துள்ளும் பாடல் எழுதி

துள்ளாத மனங்களையும் துள்ள வைத்தவர் !


உனக்காக எல்லாம் உனக்காக என்று பாடி

நமக்காக எல்லாம் நமக்காக வழங்கியவர்


இன்று நமதுள்ளமே என்று இனிமையாக எழுதி

இனிய உள்ளத்தை பொங்கும் புது வெள்ளமாக்கியவர்



காதல் ரசம் சொட்டச் சொட்டப் பாடியவர்

காதல் தோல்விக்கும் ஆறுதல் வழங்கியவர் !


இரை போடும் மனிதருக்கு இரையாகும் பாடலில்

இனிய தத்துவக் கருத்துக்களை வடித்தவர் !


தை பொறந்தா வழி பொறக்கும் என்ற பாடலில்

தன்னம்பிக்கை விவசாயிகளுக்கு விதைத்தவர் !


கையில வாங்கினேன் என்ற பாடலின் மூலம்

கஷ்டத்தை தொழிலாளர் துயரத்தை பாடியவர் !


பாட்டாளியாக பல தொழில் பார்த்து உணர்ந்து

பாட்டாளியின் பாட்டைப் பாட்டில் வடித்தவர் !


எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டுமென்று

இனிய பொதுவுடைமை கருத்தை விதைத்தவர் !


எழுதிய ஆண்டுகள் அய்ந்துதான் என்றபோதும்

என்றைக்கும் நிலைக்கும் பாடல் புனைந்தவர் !


நடிகர்கள் புகழ்ப் பெறக் காரணமானவர்

நடிக்கத் தெரியாத குழந்தை உள்ளம் பெற்றவர் !


பட்டுக்கோட்டை என்றவுடன் நினைவிற்கு வருவது

பாட்டுக் கட்டிய கவிஞர் கல்யாணசுந்தரமே !


பாடலாசிரியர்கள் வந்தார்கள் வருகிறார்கள்

பாட்டுக்கோட்டை உன்னிடத்தை நிரப்பவில்லை

கருத்துகள்