ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

 


ஹைக்கூ  ! கவிஞர்   இரா  .இரவி !

கூடுகின்றது சுவை
மழைக்காலம்
தேநீர் !

வாசம் தரும்
எரித்த போதும்
ஊதுபத்தி ! 

தண்ணீர் தெளிக்கிறான் புல்லுக்கு
மழையில் குடைபிடித்து  
மடையன் !

சென்றதில்லை கற்க
செல்கிறேன் கற்பிக்க
கல்லூரிக்கு !

தெரிவதில்லை
இருட்டில்
நிழல் !

ஆபத்து
தலைக்கனம்
தீக்குச்சி !

வழிமாறாமல் வந்துவிடுகின்றன
வருடா வருடம் வேடந்தாங்கல்
அயல்நாட்டுப் பறவைகள் !

இளையோர் முதியோர்
பாகுபாடு இன்றி தொடருது
கொரோனா !
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
https://tamil.pratilipi.com/search?q=%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%20.%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF

கருத்துகள்