சாம்பலாய் முடியும் உடல் ! கவிஞர் இரா .இரவி !





சாம்பலாய் முடியும் உடல் ! கவிஞர் இரா .இரவி !

சதிராடும் மானிடனே உடன் உணர்ந்திடு
சாம்பலாய் முடியும் உடல் உன் உடல் !

தான் என்ற ஆணவம் அகற்றி விடு
தன்னைப் போலவே பிறரை நேசித்திடு !

எல்லாம் எனக்குத் தெரியும் என்று
எப்போதும் நீ  எண்ணி விடாதே !

உனக்குத் தெரியாதவை கோடி உண்டு
உன்னை மட்டும் உயர்வாய் எண்ணாதே !

என்னை வெல்ல யாரும் இல்லை
என்று நீ எப்போது எண்ணாதே !

உன்னை வெல்ல ஒருவன் உண்டு
ஒருபோதும் கர்வம் கொள்ளாதே !

நிலையற்ற உலகில் எதுவும் நிலையன்று
நிரந்தரமாய் வாழ்வோம் என்று எண்ணாதே !

எந்த நிமிடமும் நிகழலாம் உன் மரணம்
என்பதை நினைவில் நிறுத்தி அன்பு செய் !

கருத்துகள்