மதுரை ! கவிஞர் இரா. இரவி.



மதுரை!
கவிஞர் இரா. இரவி.
******
சதுரம் சதுரமாக வடிவமைக்கப்பட்ட மதுரை
சங்கம் காலம் முதல் இன்றுவரை அதே மதுரை !
தூங்காத நகரம் பெயர் கொண்ட மதுரை
தள்ளாத குளம் கொண்ட வற்றாத மதுரை !
உலக அதிசயமான மீனாட்சி கோயில் உள்ள மதுரை
உலகமே வியக்கும் கீழடிக்கு அருகே உள்ள மதுரை !
சங்கம் வைத்து தமிழ் என்றும் வளர்க்கும் மதுரை
சகோதரர்களாக அனைவரும் இணைந்து வாழும் மதுரை !
சகல மதத்தவர்களும் வாழ்ந்து வரும் மதுரை
சிற்பக்கலையை உலகிற்குப் பறைசாற்றும் மதுரை !
பருத்திப்பால் செகர்தண்டா கிடைக்கும் மதுரை
பஞ்சம் பிழைக்க வந்தோரை வாழ்விக்கும் மதுரை !
கறிதோசை முட்டை புரோட்டா கிடைக்கும் மதுரை
கனிவாகப் பேசிடும் மக்கள் வாழும் மதுரை !
சைவம் அசைவம் அனைத்தும் கிடைக்கும் மதுரை
சமண சமய குகைகள் உள்ள மதுரை !
கழுதை கூட வெளியில் செல்ல விரும்பாத மதுரை
கண்டவர்களைச் சுண்டி இழுக்கும் மதுரை !
சுற்றுலாத் தளங்கள் பல உள்ள மதுரை
சுந்தரத் தமிழ் எங்கும் கேட்கும் மதுரை !
உலகின் முதல் மனிதன் தோன்றிய மதுரை
உலகின் முதல் மொழி தமிழ் ஒலிக்கும் மதுரை !
--

கருத்துகள்