ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


ஹைக்கூ  ! கவிஞர் இரா .இரவி !

தெருவெல்லாம் 
முழக்கம் 
தமிங்கிலம் !

தொடங்கினர் 
ஒப்பாரி 
இறக்கும்முன்பே !

உதவவில்லை பெற்ற மகன் 
உதவியது 
ஒய்வு ஊதியம் !

மறந்தான்  வளர்த்த மகன் 
காக்கின்றன 
வளர்த்த மரங்கள் !

குடிக்காதீர் அன்று 
குடித்துவிட்டு வாகனம் 
ஓட்டாதீர் இன்று !

சுகம் காணுகின்றனர் 
சும்மா இருப்பதில் 
சோம்பேறிகள் !

பிறரைக் காதிலிப்பது பின்பு 
முதலில் காதலி 
உன்னை !

நிறைந்து வழிகின்றன
குறைகள் 
குறை தீர்க்கும் நாளில் !

அல்லாடுகின்றனர் 
அடிப்படைத் தேவைகளுக்கு 
மக்கள் !

வீணாய் கலக்குது கடலில் 
போராடிப் பெற்ற 
காவிரி !

இயற்கைக்கு இருக்கும் கருணை 
இருப்பதில்லை 
மனிதர்களுக்கு !
 

கருத்துகள்