காதல் ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !



காதல் ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

கவிதை வழங்கிடும் 
அட்சயப்பாத்திரம் 
அவள் முகம் !

நீரின்றி 
வாழ்கின்றன மீன்கள் 
அவள் விழிகள் !

ஆயிரம் பேரிலும் 
தெரிவாள் தனித்து
ஆயிரத்தில் ஒருத்தி !

மறந்தது பசி 
பிறந்தது மகழ்ச்சி 
அவள் வருகை !

தோற்றது 
காந்த விசை 
அவள் விழிகளிடம் !

நாள் முழுவதும் 
ரசிக்கலாம் 
நடனமிடும் விழிகள் !

தேவையில்லை வண்ணம் 
இயற்கையில் சிவப்பு 
அவள் இதழ்கள் !

அகம் வைத்ததால் 
அறியவில்லை அகவை 
அழகி அவ்வளவுதான் !

அழகாகின்றது
எந்த ஆடையும் 
அவள் அணிந்ததும் !

அவளின் அளவிற்கு 
வேறு யாருக்கும் இல்லை 
குரல் இனிமை !

வனப்பில் 
தோற்றது வண்ணத்துப்பூச்சி 
என்னவளிடம் !

அழகிகளும் பொறாமை
கொள்ளும் அழகு 
என்னவள் !


நடந்துவரும் நந்தவனம் 
சுண்டிஇழுக்கும் சோலைவனம் 
என்னவள் !

கருத்துகள்