விழிக்கொடை ! கவிஞர் இரா .இரவி!

விழிக்கொடை ! கவிஞர் இரா .இரவி!

வந்தது பார்வை
பார்வையற்றவர்களுக்கு
விழிக்கொடை !

இறந்தப் பின்னும்
இறக்காத விழிகள்
விழிக்கொடை !

மண்ணுக்கும் தீயுக்கும் வேண்டாம்
மனிதர்களுக்கு வேண்டும்
விழிக்கொடை !

கருவிழிகள்
அகற்றியது இருள்
விழிக்கொடை !

வாழ்கிறான் கொடையில்
வள்ளல் கர்ணன்
விழிக்கொடை !

உயிர்ப் பிரிந்தும்
உயிர்ப் பெற்றது
விழிக்கொடை !

உடல் மாறியும்
உயிர் உள்ளது
விழிக்கொடை !

ஒளி ஏற்றியது
வழி காட்டியது
விழிக்கொடை !

துன்பம் துரத்தி
இன்பம் ஈந்தது
விழிக்கொடை !

குறையை நீக்கி
நிறைவாக்கியது
விழிக்கொடை !

மரிக்கவில்லை மனிதம்
மனிதரில் புனிதம்
விழிக்கொடை !

வைத்தது முற்றுப்புள்ளி
மூடநம்பிக்கைக்கு
விழிக்கொடை !

செத்தப்பின்னும்
சாகவில்லை
விழிக்கொடை !

இறப்பிலும் பிறப்பு
இறக்கத உறுப்பு
விழிக்கொடை !

மரணித்தும் மரணிக்கவில்லை
முடிவிலும் இனிய தொடக்கம்
விழிக்கொடை !

கருத்துகள்