ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
அம்பு இல்லா வில்லுக்கும்
மதிப்புண்டு
வானவில் !

பிரிய மனமில்லை
பிரித்தது காற்று
மரத்திலிருந்து இலை !

நதி நடந்ததால்
பளபளப்பானது
கூழாங்கல் !

சுமை அல்ல
உயர உதவும்
சிறகு !

பேசும் பேச்சை விட
வலிமையானது
மவுனம் !

பஞ்ச பூதங்களை
கொள்ளையடிக்கும் பூதம்
மனிதன் !

எடுத்தால் திருட்டு
நாமாக வழங்கினால்
வரதட்சணை !

கருத்துகள்