வாழ்விக்க வந்த வள்ளுவம் ! கவிஞர் இரா .இரவி !

வாழ்விக்க வந்த வள்ளுவம் ! கவிஞர் இரா .இரவி !

கலங்கரை விளக்கமாக வழிகாட்டும் வள்ளுவம் !
கலங்கி நிற்கையில் திசை காட்டும் வள்ளுவம் !
மனச்சோர்வு நீக்கி தன்னம்பிக்கைத் தரும் வள்ளுவம் !
மனிதநெறி மனிதனுக்குக் கற்பிக்கும் வள்ளுவம் !
வாழ்க்கைப் படகை செலுத்தத் துடுப்பாகும் வள்ளுவம் !
வாழ்வின் அர்த்தம் உணர்த்திடும் வள்ளுவம் !
ஒப்பற்ற உயர்ந்த இனிய இலக்கியம் வள்ளுவம் !
ஒழுக்கத்தை உயிருக்கு மேலாக இயம்பிய வள்ளுவம் !
மனஇருளை நீக்கி அறிவு ஒளி தரும் வள்ளுவம் !
மனக்கவலை போக்கும் மருந்தாகும் வள்ளுவம் !
மனிதனை சிறந்த மனிதனாக்கும் வள்ளுவம் !
மனிதநேயம் மனதிற்குப் பயிற்றுவிக்கும் வள்ளுவம் !
வாசித்தவருக்கு வாழ்வியல் நெறி புகட்டும் வள்ளுவம் !
வாழ்வில் வெற்றிக்கு வழி வகுக்கும் வள்ளுவம் !
அகிம்சை தத்துவம் போதிக்கும் வள்ளுவம் !
அன்பின் வலிமை உணர்த்திடும் வள்ளுவம் !
நன்றியை மறக்காதீர் கற்பிக்கும் வள்ளுவம் !
நல்ல செயல்கள் செய்ய வைக்கும் வள்ளுவம் !
கல்வியின் சிறப்பை சித்தரிக்கும் வள்ளுவம் !
கற்றவரின் மேன்மையைக் காட்டிடும் வள்ளுவம் !
தாயே பசித்திருந்தாலும் தவறு செய்யாதே வள்ளுவம் !
தன்னிகரில்லா அறம் போதிக்கும் அற்புதம் வள்ளுவம் !
விலங்கு குணம் அறவே அகற்றிடும் வள்ளுவம் !
விலங்கிலிருந்து வேறுபடுத்திடும் வள்ளுவம் !
ஈடு இணையற்ற உலகப் பொதுமறை வள்ளுவம் !
எல்லோரும் போற்றிடும் பெட்டகம் வள்ளுவம் !
தமிழை அறியாதவரும் அறிந்தது வள்ளுவம் !
தமிழுக்கு மகுடமாக விளங்குவது வள்ளுவம் !

கருத்துகள்