ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ !   கவிஞர் இரா .இரவி !
பூகம்பம் வரும் முன்
அறியும் தவளை
மனிதன் ?
சேமிக்கும் எறும்பு
மழைக் காலத்திற்கு
மனிதன் ?
நன்றி மறக்காது
வாலாட்டும் நாய்
மனிதன் ?
பசிக்காமல் உண்பதில்லை
விலங்குகள்
மனிதன் ?
பிறந்ததும் உடன்
நீந்திடும் மீன்
மனிதன் ?
அடைகாக்கும் காகம்
குயிலின் முட்டையையும்
மனிதன் ?
காடுகள் வளரக்
காரணம் பறவைகள்
மனிதன் ?
சீண்டாமல் எவரையும்
கொத்தாது பாம்பு
மனிதன் ?
ஓடிடச் சலிப்பதில்லை
மான்
மனிதன் ?
அசைவம் உண்ணாது
அசைவம் ஆகின்றது
ஆடு

கருத்துகள்