தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! வெற்றிமுரசு ! கவிஞர் இரா .இரவி !

தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு !

வெற்றிமுரசு ! கவிஞர் இரா .இரவி !

சல்லிகட்டுக் காளைகள் துள்ளிப் பாய்ந்தன 
சந்தோசத்தில் தமிழர்கள் உள்ளம் மகிழ்ந்தனர் !

அமைதி வழியில் போராட்டிப் பெற்ற வெற்றி   
அயல்நாட்டுக் குளிர்பானம் ஒழித்திட வழிவகுத்த வெற்றி !

அயல்நாட்டு நிறுவனங்ககளை எச்சரிக்கக் கிடைத்த வெற்றி 
அனைவரும் ஓரணியில் திரண்டதால் கிடைத்த வெற்றி !
.
அங்கு இங்கு என்று எங்கும் தொடர்ந்த போராட்டம் 
அப்படியே தமிழகத்தை ஒருங்கிணைத்தப் போராட்டம் !

மாணவர்கள் தொடங்கி வைத்த அறப்போராட்டம் 
மாண்புகளோடு கண்ணியமாக நடந்தப் போராட்டம் !

ஆண் பெண் இருபாலரும் கூடியபோதும் 
அனைவரும் பண்பு காத்திட்டப் போராட்டம் !

போராளிகளின் பசிப்  போக்கியது ஒரு கூட்டம்   
பாதுகாப்புக்கு நின்றவர்களின்  பசியும் போக்கியது !

அரசியல்வாதிகளுக்கு பாடம் கற்பித்தப் போராட்டம் 
அரசியல் இன்றி அழகாய் நடந்தப் போராட்டம் !

உலகமே உற்று நோக்கிய உன்னதப் போராட்டம்
உலகம் முழுவதும் ஆதரவு தந்திட்டப் போராட்டம் !

அவனியாபுரம் பாலமேடு அலங்காநல்லூர் சல்லிக்கட்டு 
அழகாய் நடக்கின்றது அகிலம் கண்டு ரசிக்கிறது !

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை மட்டுமல்ல 
கூடிப்போராடினால் கிட்டும் வெற்றி என்பது உண்மை ! 

உலகமய ஏமாற்று அரசியலுக்கு வைத்தது வேட்டு
உலகிற்கே உணர்த்தியது பன்னாட்டுத் திருட்டு !

காளைகள் இனத்தை அழிக்கும் பன்னாட்டுத் சதியை
காளைகள் கூடி முறியடித்தனர் கொட்டுக வெற்றிமுரசு !  


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்