நன்றி .தினமணி கவிதைமணி இணையம் !

நன்றி .தினமணி கவிதைமணி இணையம் !


http://www.dinamani.com/specials/kavithaimani/2017/feb/27/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-2656964.html



--

நிலா விடு தூது: கவிஞர் இரா .இரவி

By கவிதைமணி  |   Published on : 27th February 2017 03:26 PM  |   அ+அ அ-   |  
சங்க காலத்தில் இருந்தது நிலா விடு தூது 
சிறப்பான இக்காலத்தில் அலைபேசி விடு தூது !
தகவல் தொடர்பு இல்லாத காலத்தில் 
தலைவி நிலாவைத் தூது விட்டாள் அன்று !
அமெரிக்காவில் இருந்துக் கொண்டே இன்று
அலைபேசியில் முகம் பார்த்துப் பேசுகிறாள் !
நிலாவில் நீர் உள்ளது என்று இன்று
நன்றாக ஆராந்து அறிவித்தான் தமிழன் !
நிலாவிற்கு அன்றே ஈரமுண்டு என்றுதான் 
நங்கை அதனை தலைவனுக்குத் தூது விட்டாள்  ! 
நிலவை சாட்சியாக வைத்து காதலித்த 
நீங்காத நினைவுகள் காதலருக்கு உண்டு !
நிலவு பார்த்ததே என்றே பயத்தால்
நின் கரம் பிடித்தேன் என்றவர்கள் உண்டு !
நிலவுக்கும் காதலுக்கும் அன்றும்  என்றும் 
நெருங்கிய தொடர்பு உண்டு !
நிலவு பேசாது தன்னோடு பேசியதாக 
நாளும் கற்பனை செய்பவர்கள்  உண்டு !
நிலா விடு தூது இன்று காதலர்களிடையே 
நின்று விட்டப்  போதிலும் இன்றும் !
நிலாவின் மீதான காதல் காதலர்களுக்கு 
நாளும் இருந்துக் கொண்டே இருக்கின்றது ! 
புதுமண  இணைகள் செல்லும் சுற்றுலாவை
புதுமையாக தேன்நிலவு என்று பெயர் வைத்தனர் !
இனி வருங்காலத்தில் புதுமண  இணைகள்
இனிய நிலாவிற்கே சென்று வரும் காலம் வரும் !

கருத்துகள்