படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 

பசியாற்றி மகிழ்கிறாள் 
கிராமத்து 
பெண் வள்ளலார் !

பசுவிற்கான புல்லை 
ஆட்டிற்கும் தந்துமகிழ்கிறாள் 
உயிர்நேயம் !

தட்டிவிடாமல் 
தந்து மகிழ்கிறாள் 
நல்ல சிறுமி !

கால்களால்  மிதித்தபோதும்   
உணவளிக்கும் சிறுமி
வாழ்கிறாள் திருக்குறள் வழி !  

நகரத்தில் தேய்கிறது   
கிராமத்தில் வாழ்கிறது 
நேயம் !

கருத்துகள்