தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! புதையல் ! கவிஞர் இரா .இரவி !



தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !
புதையல் !   கவிஞர் இரா .இரவி !

புதையல் தேடி  அலையும்    உலகம்   
புண்ணியம் தேடி அலைவது இல்லை !

புதையலுக்கான தேடல் எங்கும் உள்ளது 
படிக்காதவர் படித்தவர் எல்லோருக்கும் உள்ளது !

புதையலுக்காக   நரபலி கூட தருகின்றனர்
பின் கைதாகி கம்பி எண்ணுகின்றனர் !
.
உழைக்காமல் வரும் செல்வம் நிலைக்காது 
உழைத்த செல்வமும் இல்லாமல் போகும் காலம் !

விரைவில் பணக்காரன் ஆக வேண்டும் என்ற 
விருப்பத்தில் புதையல் தேடி அலைகின்றனர் !  
 
கிடைக்கும் புதையல் தனிநபர் சொந்தமென்று 
கிடைக்கும் புதையல் அரசாங்கத்தின் சொத்தாகும் ! 

கிடைத்த புதையலை அப்படியே அமுக்கி 
காலம் கழிந்து கைதாவதும் உண்டு !

இறந்த பிச்சைக்காரன் காலடியில் பார்த்தபோது 
எண்ணிலடங்கா பணப்புதையல் இருந்து என்ன பயன் !

உள்ளத்தில் உள்ளது உண்மைப் புதையல் 
உணர்ந்தால் இன்பம் விளையும் வயல் !



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்