தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! எல்லைக்கோடு ! கவிஞர் இரா .இரவி !


தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !

எல்லைக்கோடு ! கவிஞர் இரா .இரவி !

பறவைக்கு இல்லை என்றும் எல்லைக்கோடு
பரந்து விரிந்து பறந்து வரும் பறவை !

மனிதர்கள்தான் வகுத்துள்ளனர் எல்லைக்கோடு
மனிதர்களை எல்லை தாண்டியதாய் கைது !

கடலுக்குள் ஏதடா எல்லை இது புரியாமல்
கைது செய்து மகிழ்கிறான் சிங்களன் !

வயிறுப் பிழைப்பிற்கு வரும் மீனவர்களை
வயிற்றில் அடித்து வலைகளைப் பிடுங்குகின்றான் !

வேகமாய் ஒரு அலை அடித்தால் படகு
விரைவாய் கடந்துவிடும் போலி எல்லைக்கோட்டை   !

விரைவாய் ஒரு காற்று வீசினால் படகு
வேகமாய் கடந்துவிடும் போலி எல்லைக்கோட்டை   !

இதனைக் குற்றமென்று கைது செய்கிறான்
இவர்களைச் சிறைப் பிடித்து மகிழ்கிறான் !

கடலில் நீ வகுத்துள்ள எல்லைக்கோட்டுக்கு  
கட்டி இருக்கிறாயா  இரும்புக்  கோட்டை?

தானம் தந்த கச்சத்தீவில் தமிழக மீனவர்கள்
தலை தெரிந்தால் சுட்டு விடுகிறான் !

வலை உலர்த்திட அனுமதி இருந்தபோதும்
வலை வைத்திட விடுவதேயில்லை !

கச்சத்தீவைத் திரும்பப் பெற வாய்ப்பு உள்ளது
கொட்டம் அடக்க அதுதான் தீர்வாக உள்ளது !

பறவைக்கு உள்ள சுதந்திரம் கூட
பகுத்தறிவு பெற்ற மனிதனுக்கு இல்லை !

விலங்குகளுக்கு உள்ள நேயம் கூட
விவேக மனிதனுக்கு இல்லை !

யாதும்  ஊரே யாவரும் கேளிர் என்று
யாவருக்கும் சொன்னவனுக்கா  எல்லைக்கோடு !

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்