தினமணி இணையம் தந்த தலைப்பு ! அலைகளின் தாகம் ! கவிஞர் இரா .இரவி !


தினமணி இணையம் தந்த தலைப்பு !

அலைகளின் தாகம் ! கவிஞர் இரா .இரவி !

கடலைக் கடந்து விடலாமென்று 
கடல் அலைகள் முயலுகின்றன !

கடக்க முடியாமல் தோற்றுப்போய் 
கடலுக்கு திரும்பி விடுகின்றன !

தோல்வி பற்றிய கவலைகள் 
துளியுமின்றி  அலைகள் அலைகின்றன !

என்றாவது ஒருநாள் கடப்போம் 
என்ற நம்பிக்கையில் வருகின்றன !

பாறைகளிலும் முட்டி மோதுகின்றன 
பயணம் முடிவின்றித் தொடர்கின்றன !

அலைகளின் தாகம் கடல் அறியவில்லை 
அறிந்திருந்தால் ஆறுதலாகி  இருக்கும்  !

கடலில் வாழ்ந்தாலும் அலைகளுக்கென்று 
கனவும் ஏக்கமும் தாகமும் உண்டு !

கடல் தன்னில் வாழும் அலைகளை 
கட்டாயம் கடல் மதித்திட வேண்டும் !

எதோ ஒரு ஏக்கத்தின் காரணமாகவே 
எப்போதும் அலைகள் ஏங்கி வருகின்றன !

அலைகள் இல்லாத கடலும் உண்டு 
அலைகள்தான் கடலுக்கு அழகு !

முயற்சி திருவினையாக்கும் என்ற 
முக்கியமான குறளுக்கு எடுத்துக்காட்டு !

ஒருநாள் பொங்கி எழுந்து அலைகள் 
கடலைக் கடக்கும் அந்நாள் சுனாமியாகும் !

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்