தினமணி இணையம் ! கவிதை மணி !கவிஞர் இரா .இரவி

-- 
தினமணி இணையம் ! கவிதை மணி !கவிஞர் இரா .இரவி
.
முகப்பு > கவிதைமணி
எப்படி மறப்பேன்: கவிஞர் இரா .இரவி
By dn
First Published : 27 June 2016 03:02 PM IST
எம் தமிழினத்தை கூண்டோடு அழித்தான்
இந்த உலகமே வேடிக்கைப் பார்த்தது !
போரில்லாப்பகுதி என்று அறிவித்து விட்டு
போய் மக்கள் குவிந்ததும் குண்டுப் போட்டான் !
விடுதலை கேட்டது குற்றமெனக் கூறி
வீதியில் விட்டு சுட்டு மகிழ்ந்தான் !
குழந்தைகள் பெண்கள் முதியோர் என்று பாராமல்
கண்மூடிதனமாகக் கொலைகள் புரிந்தான் !
மருத்துவமனை பள்ளி விடுதி என்று பாராமல்
மனம் போனபடி கொன்று குதூகலித்தான் !
சரண் அடைபவர்களை சுடக் கூடாது என்று
சட்டம் சொல்கிறது சுட்டுக் குவித்தான் !
எட்டு நாட்டுப் படைகளின் உதவியுடன்
சொந்த நாட்டு மக்களை பலியிட்டுச் சிரித்தான் !
கொன்று குவித்த கொடூரன் இலங்கையில் இன்று
கோலாகலமாக சுதந்திரமாக வலம் வருகிறான் !
ஐ .நா .மன்றம் உள்ளிட அனைவரும் குற்றவாளிகள்
அநீதி இழைத்தவன் மீது நடவடிக்கை இல்லை !
மடிந்தது தமிழினம் என்ற காரணத்தால்
மனமில்லை தட்டிக் கேட்க யாருக்கும் !
தூக்குத்தண்டனைக்குகுரிய குற்றவாளியை
குறைந்தபட்சம் கைது கூட செய்யவில்லை !
எம் தமிழினம் அழித்தவனை எப்படி மறப்பேன் ?
இனவெறி பிடித்த மிருகத்தை எப்படி மன்னிப்பேன் ?
மறக்க முடியாத வடு நெஞ்சில் உள்ளது
மன்னிக்க முடியாத வெறி மனதில் உள்ளது !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்