ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

எண்ணிலடங்காதவை 
எண்ணம் கவர்ந்தவை 
மலர்கள் !

மதித்து ரசிப்பவர்களுக்கு 
மகிழ்வைப் போதிக்கும் 
மலர்கள் !

கோபம் கொள்வதில்லை 
ஊடல் கொள்வதில்லை 
மலர்கள் !

வரவேற்கின்றன 
வண்டுகளை 
மலர்கள் !

தேன் உண்டால் 
தேம்பி  அழுவதில்லை 
மலர்கள் !

கண் கொள்ளாக்   காட்சி 
கண் கவர் மாட்சி 
மலர்கள் !

கர்வம் இல்லை 
கொள்ளை அழகு 
மலர்கள் !

இல்லவே   இல்லை 
போட்டி பொறாமை 
மலர்கள் !

கூர்ந்துப் பார்த்தால்
எல்லாம் அழகு 
மலர்கள் !

ரசித்துப் பார்த்தால் 
அழகோ அழகு 
எருக்கம் மலர்கள்  !

பறக்காமல் 
பட்டாம் பூச்சி 
ஓ மலர் !
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்