ஹைக்கூ ( சென்ரியு ) கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ( சென்ரியு ) கவிஞர் இரா .இரவி !
வேதனையில் விவசாயி
உடைத்தனர் சாலையில்
திருஷ்டி பூசணி  !

பொருள் தருவதை விட
புத்தகம் தருவது மேல்
நண்பனுக்கு !

பணத்தால் வருவதல்ல
மனத்தால் வருவது
இன்பம் !

வாய்ப்பு வழங்கினால்
வலம்வருவர் வானிலும்
பெண்கள் !

சாம்பார் இன்றி
ரசம் வந்தது
விலை ஏற்றம் !

மடமையின் உச்சம்
மனிதன் கொலை
மாட்டிற்காக !

வேண்டாம் அவமரியாதை
வேண்டும் மரியாதை
முதுமைக்கு !


கருத்துகள்