குற்றம் கடிதல் ! இயக்கம் பிரம்மா ! திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !

குற்றம் கடிதல் !


இயக்கம் பிரம்மா !

திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !

படத்தில் வெட்டுக் குத்து இல்லை ,குத்துப்பாட்டு இல்லை ,இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை .துப்பாக்கி சூடு இல்லை .ஆங்கிலம் கலந்த தமிங்கிலப் பாடல் இல்லை  ஆபாச நடனம் இல்லை . கூத்து நடனம் உள்ளது .படத்தில் நல்ல பாடம் உள்ளது. அதனால் படம் வெற்றியும்,உலக விருதும் பெற்றுள்ளது .இன்னும் பல விருதுகள் கிடைக்கும் . 

வசூலை மனதில் வைத்து மக்களை முட்டாளாக்கும் மசாலாப் படம் இயக்கும் இயக்குனர்களும் ,மக்களை முட நம்பிக்கையில் ஆழ்த்தும் பேய்ப்படம் எடுக்கும் இயக்குனர்களும் பார்த்து திருந்த வேண்டிய மிக நல்ல படம் இது .இயக்குனர் பிரம்மா சிற்பி சிலை செதுக்குவது போல காட்சிகளை செதுக்கி உள்ளார் 

படத்தின் தலைப்பே திருக்குறளின் அதிகாரத் தலைப்பு .பெயர் சூட்டியமைக்கு முதல் பாராட்டு .படம் தொடங்கும்போது திருக்குறள் தெளிவுரை எழுதியவர்கள் திருக்குறளையும் எழுதி இருக்கலாம் .

குற்றம் கடிதல் !அதிகாரம் . திருக்குறள் எண் 434 

குற்றமே காக்க பொருள் ஆகக் குற்றமே 
அற்றம் தரூஉம் பகை !
.
குற்றம் செய்யாமல் இருப்பதே நன்மை தரும் .செய்த குற்றம் பகையை உருவாக்கும் .

ஆசிரியர் செய்த சிறு குற்றம் பெரிய பகையை உருவாக்கியதே கதை .பள்ளி மாணவர்களுக்கு உரிய வயதில் பாலியல் கற்பித்தல் அவசியம் .அப்படி கற்பித்தால் பாலியல் குற்றங்கள் நடக்காது என்பதே கதையின் கரு .காக்கா முட்டை படத்திற்கு அடுத்தபடியாக வந்துள்ள தரமான படம் குடும்பத்துடன் போய் பார்க்க வேண்டிய படம் .

இந்த படத்தில் ராதிகா பர்ஷித்தா ,சாய் ராஜ்குமார் ,பாவேல் நவகீதன், குலோத்துங்கன் ,துர்கா வேணுகோபால் ,நிகிலா கேசவன் மற்றும் கூத்துக் கலைஞர்கள் யாருமே நடிக்க வில்லை பாத்திரமாகவே மாறி விட்டனர் .திரைப்படம் பார்க்கிறோம் என்பதையை மறக்கடித்து நேரடியாக நிகழ்வுகளைப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தி வெற்றி பெறுகின்றனர் . 


மெர்லின் என்ற கிறித்தவ ஆசிரியர் இந்து மணமகனை காதலித்து மணமுடித்து விடுப்பு முடிந்து முதல் நாள் பள்ளிக்கு செல்கிறாள் .சக ஆசிரியர் அவரது கணவருடன் திரைப்படம் செல்கிறேன் .என் வகுப்பை நீ பார்த்துக் கொள் என்று ஒப்படைத்து செல்கிறார்  

வகுப்பில் உள்ளே சென்றதும் ஒரு மாணவி மாணவன் பற்றி புகார் சொல்கிறாள. தோழி பிறந்த நாள் என்று சாக்லேட் கொடுத்ததற்கு சக மாணவன் முத்தம் தந்து விட்டான் .என்கிறாள் .உடன் அவனை அழைத்து கேட்கிறாள் .அவன் ஆமா முத்தம் கொடுத்தேன் .உங்களுக்கு பிறந்த நாள் என்றாலும் உங்களுக்கும் கொடுப்பேன் .என்கிறான் .உடன் கோபம் அடைந்த 
மெர்லின் மாணவனை அறைந்து விடுகிறார் .மாணவன் மயக்கம் அடைந்து  கிழே விழுகிறான் .மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர் .அறுவைச் சிகிச்சை  செய்ய வேண்டும் என்கின்றனர் .கோமா நிலைக்கு போகவும் வாய்ப்பு உண்டு என்கின்றனர் மருத்துவர்கள் .


இதனை அறிந்த பள்ளி முதல்வர் மெர்லினை கணவருடன் கொள்ளி மலைக்கு  சென்று  விடுங்கள் இங்கு இருந்தால் ஆபத்து நிலைமை மோசமாகி விடும் என்று அனுப்பி வைக்கிறார் .மருத்துவச்   செலவு முழுவதையும் ஏற்பதாகச் சொல்லி பணம் செலுத்தி விடுகிறார் .அவரது மனைவியும் பள்ளியில் ஆசிரியர் அவர் கணவருக்கு ஆறுதல் தருகிறார் .
அறை வாங்கி மயங்கி விழுந்த மாணவனுக்கு ஏற்கனவே மூளையில் கட்டி இருக்கின்றது.அறை வாங்குவதற்கு முன்பே ரத்தம் வடிந்த கைக்குட்டையை சக மாணவி எடுத்துத் தருகிறாள் . 
மெர்லின் மாணவனை அடித்ததை நினது நினைத்து மாணவனுக்கு வாழ்த்துவது என்றால் கன்னத்தில் முத்தம் இடும் பழக்கம் இல்லத்தில் உள்ளது .அது தெரியாமல் முத்தம் என்பதை தவறாகப் புரிந்து குற்றம் செய்து விட்டோம் என்று மிகவும் வருதுகின்றால் .தன் கையையே ஒரு பகைவனைப் போல பார்க்கிறாள் .அவள் கணவன் அவளுக்கு ஆறுதல் சொல்லி பக்க பலமாக இருக்கிறான் .
அறை வாங்கி மயங்கி விழுந்த மாணவனுக்கு அப்பா இல்லை இறந்து  விட்டார் .அம்மாதான் ஆட்டோ ஓட்டி  இவனை வளர்க்கிறாள் .அவள் சகோதரன் மிகவும் கோபக்காரன் .அவன் கேள்விப்பட்டு உடன் மெர்லின் வீட்டுக்கு செல்கிறான் .வீடு பூட்டி உள்ளது .உடன் மெர்லின் அம்மா வீட்டிற்கு செல்கிறான் .

.
அங்கே அல்லோலுயா பிராத்தனை நடக்கின்றது முடியும் வரை காத்து இருந்து  விட்டு முடிந்ததும் உள்ளே சென்று மகள் மெர்லினை அலைபேசியில் அழை அல்லது அவள் எண் கொடு என்கிறான் .எண் எதற்கு என்று கேட்டதும் உன் மகள் அடித்த என்  மாப்பிள்ளை   மருத்துவமனையில் உள்ளான் .என்கிறான் .அலைபேசியில் அழைக்கிறாள் கிடைக்கவில்லை .சீனம் கொண்டு செல்கிறான் .ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னம் காட்ட மோட்டோம் என்று சொல்லி செல்கிறான் .
மெர்லினும் அவளது கணவனும் கொல்லிமலை நோக்கி செல்லும்போது .அலைபேசியில் பேச முடியவில்லை என்று பொது தொலைபேசியில் பேசும்போது பேருந்து சென்று விடுகிறது .அதற்குள் சென்னைக்கு வந்து விடுங்கள் என்று காவல் அதிகாரி சொல்கிறார் .நிலைமை மிக மோசமாகி விட்டது .ஊடகங்கள் பெரிதாக்கி விட்டனர் .உடன் வந்து விடுங்கள் .என்கின்றனர் .லாரி பிடித்து சென்னைக்கு திரும்புகின்றனர் .வேறு பேருந்தில் ஏறி வரும்போது கணவன் தூங்கும் பொது மெர்லின் பேருந்தை விட்டு இறங்கி விடுகிறாள் .விழித்துப் பார்த்த கணவன் அதர்ச்சி அடைந்து பேருந்தை நிறுத்தச் சொல்லி இறங்கி தேடுகின்றான் .மெர்லின் தற்கொலை செய்ய தண்டவாளம் நோக்கி செல்கிறாள் .கணவன் காப்பாற்றி அழைத்து வருகிறான் 
மருத்துவமனைக்கு செல்கின்றனர் மாணவனின் அம்மாவின் கால்களை பிடித்து அழுது அம்மாவின் கைகளால் தன்னை மாறி மாறி அறைந்து கொள்கிறாள் .உடன் அந்த அம்மா இவளை வாரி அனைத்துக் கொள்கிறாள் .இந்தக் காட்சியின் திரையரங கில் பலரும் கை தட்டினார்கள் .
பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவ மாணவியரும் அவசியம் பார்க்க வேண்டிய நல்ல படம் .கல்வி அதிகாரி ஊடங்களிடம் ஆசிரியர் மெர்லின் மீது தவறு இல்லை மாணவனுக்கு ஏற்கனவே கோளாறு உள்ளது எண்டு விளக்கம் சொல்லும் நேரம் .மெர்லின் வந்து  நின்று  நான் அடித்தது தவறுதான் மன்னியுங்கள் என்று மன்றாடும் இடம் நிகிழ்ச்சி .
மகாகவி பாரதியாரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப  காட்சிகள் படமாக்கி விதம் சிறப்பு .ஒளிப்பதிவு மணிகண்டன் இவரை மற்றுமொரு பாலு மகிந்திரா எனலாம் அருமையான ஒளிப்பதிவு .இசையும் நன்று .
மாணவனின் மாமா இறுதியில் ஆசிரியர் மெர்லினுக்கு ' தாய் நாவலை எழுதி பரிசளிக்கு காட்சியோடு படம் முடிகின்றது .
படம் முடிந்து வெளிய வந்த பிறகும் படம் பற்றிய நினைவு அகலவில்லை .இயக்குனர் பிரம்மாவிற்கு பாராட்டுக்கள் நடித்த நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் பாராட்டுக்கள் .ஒட்டு மொத்த குழுவிற்கும் பாராட்டுக்கள்

படம் பார்த்த எல்லோருடைய மனதிலும் யாரையும் அடிக்கக் கூடாது என்ற கருத்து ஆழாமாக பதிந்து விடுகிறது .மிக நல்ல படம் பார்த்த மன நிறைவு .குடும்பத்துடன் திரையரங்கம் சென்று பாருங்கள் .

கருத்துகள்