திருக்குறளை தேசிய நூலாக்குக ! கருத்தரங்கம்


















திருக்குறளை தேசிய   நூலாக்குக ! கருத்தரங்கம்

மதுரையில் உள்ள மணியம்மை பள்ளியில் திருக்குறளை தேசிய   நூலாக்குக ! கருத்தரங்கம் நடந்தது .விழாவிற்கு வந்தவர்களை கவிஞர் இரா .இரவி வரவேற்றார்.  புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் மானமிகு பி .வரதராசன் தலைமை வகித்தார்.

மருத்துவர் திருமிகு ஜெய ராஜமூர்த்தி ஏன் திருக்குறளை தேசிய   நூலாக்க வேண்டும் என்பது குறித்து மிக விரிவாக எடுத்து இயம்பினார் .திருக்குறளின் அருமை ,பெருமை அனைத்தையும் கூறினார் .புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் கவிதை வரிகளையும், சிலப்பதிகார   வரிகளையும் , வள்ளலாரின் பாடல்களையும்  எடுத்து இயம்பினார் .

பேசி  முடித்தவுடன் பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று கரவொலி தந்தனர். திருக்குறளை தேசிய   நூலாக்குக என்ற தலைப்பில் சிறப்புரையாற்றிய  மருத்துவர் திருமிகு ஜெய ராஜமூர்த்தி அவர்களுக்கு புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர்  மானமிகு பி .வரதராசன் அவர்கள்  தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார் எழுதிய நூல்களை வழங்கினார். கவிஞர் இரா .இரவி கவியமுதம்  நூலை  வழங்கினார். கவிக்குயில் இரா .கணேசன் நன்றி  கூறினார் .

கருத்துகள்